நீடாமங்கலம், ஏப்.28- ‘‘இளைஞர்களுக்கு வேலை கொடு’’ என்ற முழக்கத்துடன் தமிழ கத்தின் நான்கு முனைகளிலிருந்து ஏப்ரல் 21 அன்று துவங்கிய அகில இந்திய ஜனநாயக வாலிபர் சங்கத்தின் சைக்கிள் பிரச்சாரப் பயணக் குழுக் கள் திருச்சியில் மே தினத்தன்று சங்க மிக்கின்றன. அங்கு நடைபெறும் பிரம்மாண்ட மான பொதுக்கூட்டத்தில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் பொதுச்செய லாளர் சீத்தாராம் யெச்சூரி, அகில இந்திய தலைவர் மற்றும் கேரள பொதுப்பணித்துறை சுற்றுலாத் துறை அமைச்சர் பி.ஏ.முகமது ரியாஸ் உள்ளிட்ட தலைவர்கள் கலந்து கொள்கின்றனர். வாலிபர் சங்கத்தின் மாநில துணைச்செயலாளர் ஏ.வி.சிங்கார வேலன் தலைமையில் பாண்டிச்சேரி யிலிருநது புறப்பட்ட குழு கடலூர், நாகப்பட்டினம் மாவட்டங்கள் வழி யாக புதனன்று திருவாரூர் மாவட் டத்தில் கொல்லுமாங்குடி, பேரளம், பூந்தோட்டம், சன்னாநல்லூர் உட்பட பல கிராமங்களின் வழியாக பிரச்சா ரம் செய்து புதன்கிழமை இரவு நீடா மங்கலம் வந்தடைந்தது. இப்பயணக் குழுவினருக்கு நீடா மங்கலத்தில் பிரம்மாண்டமான வர வேற்பு அளிக்கப்பட்டது. வரவேற்பு நிகழ்ச்சியில் திருவாரூர் மாவட்டச் செயலாளர் ஜோதிபாசு, மாவட்டப் பொருளாளர் ஏ.கே.வேலவன், துணைச் செயலாளர் எஸ்.இளங்கோ வன், துணைத்தலைவர் பி.விஜய், மாவட்டக்குழு உறுப்பினர் ஜே.ஜெய ராஜ் உள்ளிட்டு நூற்றுக்கணக் ்கானோர் கலந்து கொண்டனர். பின்னர் பெரியார் சிலை அருகில் நடைபெற்ற பொதுக்கூட்டத்திற்கு ஒன்றிய பொருளாளர் என்.பாரதி மோகன் தலைமை வகித்தார். ஒன்றிய துணைச் செயலாளர் எஸ்.ராஜா முன்னிலை வகித்தார். மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாவட்டச் செயற்குழு உறுப்பினர்கள் வி.எஸ்.கலியபெருமாள், பி.கந்தசாமி, மாவட்டக் குழு உறுப்பினர் ஆர்.சுமதி, ஒன்றிய செயலாளர் ஜான் கென்னடி, நகர செயலாளர் வி.தமிழ்மணி உள் ளிட்டோர் பயணக் குழுவினரை வாழ்த்தி பேசினர்.