districts

img

பிரதமரிடம் 100 கேள்விகளுடன் வாலிபர் சங்கம் ஏப்.23, 24 தேதிகளில் ‘ஆஸ்க் தி பி.எம்’ இயக்கம்

திருவனந்தபுரம், ஏப்.21-

  பிரதமரிடம் 100 கேள்வி களுடன் இந்திய ஜனநாயக வாலிபர் சங்கம் களமிறங்கு கிறது. ஏப்.23, 24 ஆகிய தேதி களில் கேரளத்தின் அனை த்து மாவட்டங்களிலும் நிகழ்ச்சிக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

  திருவனந்தபுரத்தில் வரும் 23ஆம் தேதி மாநில அளவிலான ‘பிரதமரிடம் கேளுங்கள்’ இயக்கத்தை இடது ஜனநாயக முன்னணி ஒருங்கிணைப்பாளர் இ.பி.ஜெயராஜன் தொடங்கி வைக்கிறார். நாட்டில் வேலைவாய்ப்புத் துறைக் கும், பன்மைத்துவத்துக்கும் வழிவகுத்து கேரள அரசு எதிர்கொள்ளும் சவால்க ளை வெளிப்படுத்தும் நோக்கில், மாவட்டத்தின் கால் லட்சம் இளைஞர்கள் பங்கேற்கும் வகையில், இந்திய ஜனநாயக வாலி பர் சங்கத்தின் ‘இளைய இந்தியா’ பிரச்சாரம் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

  வேலையில்லாத் திண் டாட்டம், இளைஞர்களி டையே உள்ள மனச் சோர்வு, ஊட்டச்சத்து குறை பாடு, குறைந்த ஊதியம் மற்றும் லாபம் ஈட்டும் பொ துத்துறை நிறுவனங்களை விலக்குதல் போன்ற பிரச்சனைகள் இந்தப் பிரச் சாரத்தில் எழுப்பப்படும் முக்கியப் பிரச்னைகளாகும். கேள்விகளை எதிர்கொள் ளும் துணிச்சல் இல்லாத பிர தமரிடம் நூறு கேள்விகள் என்பதே, ஆஸ்க் தி பி.எம் என்கிற முழக்கமாகும்.