தஞ்சாவூர், ஜூன் 30 - கள்ளச் சாராயத்திற்கு எதிராக போராடி உயிர் நீத்த கடலூர் தியாகிகள் குமார்-ஆனந்தன் ஆகியோரது 25 ஆம் ஆண்டு நினைவு தினத்தையொட்டி, இந்திய ஜனநாயக வாலிபர் சங்கத்தின் ரத்த தானக் கழகம் மற்றும் தஞ்சை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை இணைந்து, ஞாயிற்றுக்கிழமை தஞ்சை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் ரத்த தான முகாமை நடத்தினர். ரத்த தான முகாமிற்கு, வாலிபர் மாவட்டத் தலைவர் க.அருளரசன் தலைமை வகித்தார். மாவட்டச் செயலாளர் ஆம்பல் துரை.ஏசுராஜா, மாவட்டத் துணைச் செயலாளர் எஸ்.தமிழ்ச்செல்வன், அம்மாபேட்டை ஒன்றியச் செயலாளர் உ.சரவணன், பூதலூர் தெற்கு ஒன்றியத் தலைவர் எல்.முருகானந்தம், ஒன்றியக் குழு உறுப்பினர் ஏ.கரிகாலன், தஞ்சை மாநகரக் குழு உறுப்பினர்கள் எம்.நாகராஜன், எம்.ஹரிஹரன் உள்ளிட்டோர் ரத்த தானம் செய்தனர்.