districts

மீன்பிடி வலையை  எரித்த இளைஞர் கைது

சீர்காழி, ஜன 16- மயிலாடுதுறை மாவட்டம் கொள்ளிடம் அருகே உள்ள கொடியம்பாளையம் தீவு கிராமத்தைச் சேர்ந்த வர் மீனவர் தங்கமணி (47). இவர் கொடியம்பாளையம் ஊராட்சி மன்ற துணைத் தலைவராகவும் இருந்து வரு கிறார். இவருக்கு சொந்தமான ரூ.4 லட்சம் மதிப்பிலான பெரிய மீன்பிடி வலையை கடற்கரை ஓரம் பாதுகாத்து வைத்திருந்தார். இந்நிலையில், திங்களன்று வலைகள் தீயில் எரிந்து கருகி இருந்ததை கண்டு அதிர்ச்சிய டைந்தார். இதுகுறித்து தங்கமணி புதுப்பட்டினம் காவல்துறையில் கொடுத்த புகாரின் பேரில், போலீசார் வழக்குப் பதிந்து விசாரணை நடத்தி வந்தனர்.  விசாரணையில் முன்விரோதம் காரணமாக, கொடி யம்பாளையம் தீவு கிராமம் பிள்ளையார் கோயில் தெரு வைச் சேர்ந்த கந்தன்(23) என்பவர் வலையை தீ வைத்து  எரித்தது தெரியவந்தது. அதனைத் தொடர்ந்து கந்தனை  போலீசார் கைது செய்தனர். இதுகுறித்து மேலும் விசா ரணை நடத்தி வருகின்றனர்.  இதுகுறித்து தகவலறிந்த கொள்ளிடம் ஒன்றியக்குழு தலைவர் ஜெயபிரகாஷ், கொடியம்பாளையம் கிரா மத்துக்கு சென்று மீன்பிடி வலையை இழந்த தங்கமணி யின் குடும்பத்துக்கு நிவாரண உதவி வழங்கினார்.