திருச்சிராப்பள்ளி, ஆக.7 - நேதாஜி நகர் குடிசை வாழ் மக்களுக்கு தேவை யான அடிப்படை வசதிகளை செய்து தரக் கோரி புத னன்று கவன ஈர்ப்பு ஆர்ப்பாட் டம் நடைபெற்றது. இந்திய ஜனநாயக வாலி பர் சங்கம் மற்றும் மாதர் சங்கம் சார்பில் புதனன்று திருச்சி மாவட்டம் நவல் பட்டு ரோடு, பாரத் திருமண மண்டபம் எதிரில் நடை பெற்ற கவன ஈர்ப்பு ஆர்ப்பாட் டத்திற்கு வாலிபர் சங்க பகுதி செயலாளர் சந்தோஷ் தலைமை வகித்தார். வாலி பர் சங்க மாவட்டத் தலைவர் லெனின், மாவட்டச் செய லாளர் சேதுபதி, மாதர் சங்க முன்னாள் மாவட்டச் செயலாளர் ரேணுகா, மாவட் டச் செயலாளர் சரஸ்வதி, காட்டூர் பகுதி செயலாளர் கவிதா ஆகியோர் கண்டன உரையாற்றினர். திருச்சிராப்பள்ளி மாநக ராட்சி 41 ஆவது வார்டுக் குட்பட்ட திருவெறும்பூர் நேதாஜி நகர் பகுதியில் குடிசையில் வாழும் மக்க ளுக்கு அடிப்படை வசதி களை செய்து தர வேண்டும். பெண்களுக்கான கழிவறை களை அதிகப்படுத்தி நவீன வசதியுடன் அமைக்க வேண் டும். உடைந்து போன மின் கம்பங்களை சரிசெய்ய வேண்டும். சுத்தமான குடிநீர் வழங்க வேண்டும். பழு தடைந்த சாலைகளை சரி செய்ய வேண்டும். சாக்க டைகளை தூர்வார வேண் டும். வீடு இல்லாத ஏழை மக்க ளுக்கு தமிழக அரசு இலவச வீட்டு மனை வழங்க வேண் டும். மகளிர் உரிமைத்தொ கையை தகுதியுள்ள அனை வருக்கும் வழங்க வேண்டும் என வலியுறுத்தி இந்த ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. கோரிக்கைகளை நிறை வேற்றவில்லை எனில், அடுத்த 15 நாட்களில் ஒப்பாரி வைக்கும் போராட்டம் நடைபெறும் என அறிவிக்கப் பட்டது.