சமுதாயக் கூடம் திறப்பு விழா
பாபநாசம், பிப்.12 - தஞ்சாவூர் மாவட்டம் அய்யம்பேட்டை அருகே மணலூரில் பாப நாசம் எம்.எல்.ஏ ஜவா ஹிருல்லா தொகுதி மேம்பாட்டு நிதி ரூ.7 லட்சம் மதிப்பீட்டில் கட்டப்பட்ட சமுதாயக் கூடம் திறப்பு விழா நடை பெற்றது. இதில் பாப நாசம் எம்.எல்.ஏ ஜவாஹி ருல்லா சமுதாயக் கூடத்தை திறந்து வைத் தார். இதேபோன்று வழுத் தூர் பூக்கொல்லையில் எம்.எல்.ஏ தொகுதி மேம் பாட்டு நிதி ரூ.7 லட்சம் மதிப்பீட்டில் கட்டப்பட்ட சிறு பாலத்தையும் சட்ட மன்ற உறுப்பினர் ஜவா ஹிருல்லா திறந்து வைத் தார்.
மானிய விலையில் சிமெண்ட் பெறலாம்
மயிலாடுதுறை, பிப்.12 - மயிலாடுதுறை மாவட்டத்திலுள்ள 241 ஊராட்சிகளிலும் பிரதம மந்திரி வீடு கட்டும் திட்ட பயனாளிகளுக்கு அர சின் சார்பில் மானிய விலையில் சிமெண்ட் வழங்கப்படுகிறது. இதனை அந்தந்த ஊராட்சி ஒன்றிய அலுவ லகங்களில், கிராம ஊராட் சிகளை நிர்வகிக்கும் வட்டார வளர்ச்சி அலுவ லரிடம் உரிய ஆவணங் களுடன் விண்ணப்பித்து முன்னுரிமை அடிப்படை யில் பெற்றுக் கொள்ள லாம். மானிய விலையில் சிமெண்ட் பெறுவது தொடர்பாக ஏதேனும் புகார் தெரிவிக்க விரும் பினால் மயிலாடுதுறை மாவட்ட உதவி இயக்கு நர் (தணிக்கை) அலுவ லக தொலைபேசி 04364-212837 என்ற எண்ணை தொடர்பு கொண்டு புகார் தெரிவிக்கலாம் என மாவட்ட ஆட்சியர் ஏ.பி. மகாபாரதி தெரிவித்து உள்ளார்.
அரசுப் பள்ளியில் ஆண்டு விழா
தஞ்சாவூர், பிப்.12- தஞ்சாவூர் மாவட்டம் பேராவூரணி அருகே, ஆண்டிக்கச்சல் ஊராட்சி ஒன்றிய தொடக்கப் பள்ளியில் ஆண்டு விழா நடைபெற்றது. ஊராட்சி மன்றத் தலைவர் அமிர்தம் பழனி வேல் தலைமை வகித் தார். பள்ளி மேலாண் மைக் குழு தலைவி நா. பரிமளா, பெற்றோர் ஆசி ரியர் கழகத் தலைவர் வி. நந்தினி மற்றும் கல்விப் புரவலர்கள் முன்னிலை வகித்தனர். ஆசிரியர் க. நீலகண்டன் வரவேற் றார். தலைமை ஆசிரியை இ.அன்பு மேரி ஆண்ட றிக்கை வாசித்தார். தற்கா லிக ஆசிரியர் எஸ்.மணி மொழி நன்றி கூறினார். ஆண்டு விழாவில், மாணவ-மாணவிகளின் கலை நிகழ்ச்சிகளும், அதனைத் தொடர்ந்து பரி சளிப்பு விழாவும் நடை பெற்றது. இதில் மாண வர்கள், பெற்றோர்கள் கலந்து கொண்டனர்.
ஜாக்டோ-ஜியோ வேலைநிறுத்த ஆயத்த மாவட்ட மாநாடு
திருவாரூர், பிப்.12- திருவாரூர் மாவட்ட ஜாக்டோ-ஜியோ ஒருங்கி ணைப்பு சார்பாக விளமல் கஸ்தூரிபாய் காந்தி பள்ளி வளாகத்தில் வேலைநிறுத்த ஆயத்த மாவட்ட மாநாடு நடைபெற்றது. ஒருங்கிணைப்பாளர்கள் சே.பிரகாஷ், ச.சண்முக வடிவேல், ஆர்.முத்துவேல், சத்திய மூர்த்தி, மணிமாறன், பாலமுருகன் ஆகியோர் தலைமை வகித்தனர். தமிழ்நாடு அரசு ஊழியர் சங்கத்தின் மாநிலத் தலைவர் மு.அன்பரசு சிறப்புரையாற்றினார். மாநாட்டில் தமிழ்நாடு அரசு ஊழியர் சங்கத்தின் மாநில துணைப் பொதுச் செயலாளர் வெ.சோம சுந்தரம், மாவட்டத் தலைவர் எஸ்.செங்குட்டுவன், ஆசிரியர் மன்ற மாநிலத் தலைவர் பெ.இரா.ரவி, பட்டதாரி ஆசிரியர் கழக மாநில பொருளாளர் டி. துரைராஜ் உள்ளிட்டோர் பேசினர். பிப்.15 அன்று ஜாக்டோ-ஜியோ சார்பாக ஒரு நாள் அடையாள வேலை நிறுத்தம் நடத்துவது, பிப்.26 முதல் காலவரையற்ற வேலைநிறுத்தப் போராட்டத்தில் ஈடுபடுவது என தீர்மானிக்கப் பட்டது.
பறவைகள் கண்டறியும் பயிற்சி முகாம்
தஞ்சாவூர், பிப்.12- உலக ஈரநில தின பாதுகாப்பு விழாவை யொட்டி, பறவைகள் கண்டறியும் பயிற்சி முகாம் தஞ்சாவூர் மாவட்டம் குந்தவை நாச்சி யார் அரசு கலைக் கல்லூரியில் நடைபெற்றது ஈரநில பகுதிகளின் உயிர்க்கோளத்தைப் பாதுகாக்க, மனிதகுல நல்வாழ்வை உறுதிப் படுத்த இந்த ஒருநாள் ஈர நில தின கருத்தரங்கம் நடைபெற்றது. தமிழ்நாடு அரசின் வனத்துறையுடன் இணைந்து நடத்திய இக்கருத்தரங்கிற்கு, கல்லூரி முதல்வர் முனைவர் அ.ஜான் பீட்டர் தலைமை வகித்தார். விலங்கியல் துறை தலை வர் முனைவர் ந.சந்திரகலா வரவேற்றார். தமிழ்நாடு வனத்துறையின் மேனாள் மாவட்ட வன அலுவலர் முனைவர் மா.செல்வம் பயிற்சி முகாமை தொடங்கி வைத்து உரையாற்றினார். வனச்சரக அலுவலர் க.ரஞ்சித் ஈர நிலத்தில் உயிரின செழுமை குறித்து விளக்க உரையாற்றினார். வனவர் தி.இளஞ்செழியன் பறவைகளை கண்டறியும் தொழில்நுட்பம் குறித்து பயிற்சியளித்தார்.
கருத்துக் கணிப்புகள் முறையாக நடத்தப்படவில்லை புதுகையில் சு.திருநாவுக்கரசர் எம்.பி., பேட்டி
புதுக்கோட்டை, பிப்.12 - சில ஆயிரம் பேரிடம் நடத்தப்படும் கருத்துக் கணிப்புகள் முறையாக நடத்தப்பட வில்லை என்பதையே காட்டுகிறது என்றார் தமிழ்நாடு காங்கிரஸ் முன்னாள் தலைவ ரும், திருச்சி எம்பியுமான சு.திருநாவுக்கரசர். புதுக்கோட்டையில் ஞாயிற்றுக்கிழமை மாலை அவர் அளித்த பேட்டியில், திமுக வுக்கும் காங்கிரசுக்கும் இடையிலான கூட்டணி பேச்சுவார்த்தை முதல் கூட்டம் நடந்திருக்கிறது. அடுத்தடுத்த கூட்டங்களில் தான் முடிவுகள் எட்டப்படும். பேச்சுவார்த்தை யின் முடிவில்தான் யாருக்கு எந்தத் தொகுதி என்று முடிவாகும். நான் திருச்சியில் போட்டி யிடுவது குறித்து கட்சித் தலைமைதான் முடிவு செய்யும். அதுவரை நானாக எதுவும் சொல்ல முடியாது. ஒன்றிய அரசுக்கு அதிக வரி வருவாய் தருகிற தமிழ்நாட்டுக்கு குறைவாகவும், குஜராத் போன்ற மாநிலங்களுக்கு அதிகமாக வும் நிதி ஒதுக்கீடு செய்கிறார்கள். பாரத ரத்னா விருது யாருக்கெல்லாம் வழங்கப் பட்டுள்ளது என விமர்சனம் செய்ய வேண்டிய அவசியம் இல்லை. ஆனால், விருது கள் அறிவிக்கப்பட்ட நேரம்தான் விமர்ச னத்துக்கு உள்ளாகிறது. இதில் தேர்தல் நோக்கம் இருக்கிறது என்றுதான் விமர்சனம் செய்கிறார்கள். தேர்தலுக்கு முன்பே பலரும் கருத்துக் கணிப்புகளை நடத்துகிறார்கள். அவை யெல்லாம் முறையாக நடத்தப்படுகிறதா என பார்க்க வேண்டும். வெறுமனே சில ஆயிரம் பேரிடம் கருத்து கேட்டு தேர்தல் முடிவு களை சொல்லக் கூடாது. இறுதி முடிவை மக்கள் தான் எடுக்கப் போகிறார்கள்” என்றார்.
இடைநின்ற மாணவி மீண்டும் பள்ளியில் சேர்ப்பு
அறந்தாங்கி, பிப்.12 - இடைநின்ற ஆறாம் வகுப்பு மாணவி மீண்டும் பள்ளியில் சேர்க்கப்பட்டார். புதுக்கோட்டை மாவட்டம் மணமேல்குடி ஒன்றியம் காரக்கோட்டை அரசு உயர்நிலைப் பள்ளியில் ஆறாம் வகுப்பில் அபிநயா என்ற மாணவி ஆறுமாத பள்ளிக்கு வரவில்லை. தலைமை ஆசிரியர் பலமுறை அவரது வீட்டிற்குச் சென்று, பள்ளிக்கு வருமாறு அழைப்பு விடுத்தார். ஆனால் மாணவி பள்ளிக்கு வராமல் காலம் தாழ்த்தியுள்ளார். இந்நிலையில், ஞாயிறன்று அபிநயா மாணவியை கலக்கமங்களம் கிராமத்தில் தலைமை ஆசிரியர் (பொ) சுந்தராஜன் மற்றும் வட்டார வளமைய மேற்பார்வையா ளர் (பொ) சிவயோகம் ஆகியோர் நேரில் சந்தித்து, படிப்பின் அவசியம் குறித்து கூறினர். இந்நிலையில், திங்க ளன்று அந்த மாணவி ஆறாம் வகுப்பில் மீண்டும் சேர்க்கப் பட்டார். புத்தகங்கள் மற்றும் பாடநோட்டுகள் வழங்கப் பட்டன. மாணவி அபிநயா தொடர்ந்து பள்ளிக்கு வருவ தாக உறுதியளித்தார். இந்நிகழ்வில் இல்லம் தேடிக் கல்வி ஒருங்கிணைப்பா ளர் கண்ணன் மற்றும் ஆசிரியர்கள் உடனிருந்தனர்.
‘காஷ்மீர் அன்றும் இன்றும்’ கருத்தரங்கம்
புதுக்கோட்டை, பிப்.12 - தமிழ்நாடு மக்கள் ஒற்றுமை மேடையின் சார்பில் ‘காஷ்மீர் அன்றும் இன்றும் என்ற தலைமையில் சிறப்புக் கருத்தரங்கம் புதுக்கோட்டையில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. புதுக்கோட்டை அறிவியல் இயக்க கூட்ட அரங்கில் நடைபெற்ற கருத்தரங்கிற்கு மேனாள் சட்டமன்ற உறுப்பி னர் கவிச்சுடர் கவிதைப்பித்தன் தலைமை வகித்தார். திலவதியாகர் ஆதீனம் தயானந்த சந்திரசேரன், நகர்மன்ற துணைத் தலைவர் எம்.லியாகத்அலி, மேனாள் நகர் மன்றத் துணைத் தலைவர் துரை.திவ்யநாதன், ஆரோக்கி யசாமி ஆகியோர் முன்னிலை வகித்தனர். கருத்தரங்கில் தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர் கலைஞர்கள் சங்கத்தின் மாநில துணைப் பொதுச் செயலா ளர் களப்பிரன் ‘காஷ்மீர் அன்றும் இன்றும்’ என்ற தலைப்பில் உரையாற்றினார். தமுஎகச மாநில துணைத் தலைவர் நா.முத்துநிலவன், அறிவியல் இயக்க மாநில பொதுக்குழு உறுப்பினர் அ.மணவாளன் ஆகியோர் வாழ்த்திப் பேசினர். நிகழ்ச்சியை மக்கள் ஒற்றுமை மேடையின் மாவட்ட ஒருங்கிணைப்பாளர் மு.அசோகன் ஒருங்கிணைத்தார்.
உளுந்து, எள் பயிருக்கு காப்பீடு செய்ய பிப்.15 கடைசி நாள்
தஞ்சாவூர், பிப்.12- நெல் தரிசில் உளுந்து பயிரிட்டுள்ள விவசாயிகள் காப்பீடு செய்து கொள்ள பிப்ரவரி 15 ஆம் தேதி கடைசி நாள் என மாவட்ட ஆட்சியர் தீபக் ஜேக்கப் தெரிவித் துள்ளார். இதுகுறித்து அவர் தெரிவிக்கையில், விவசாயி களுக்கு எதிர்பாராமல் ஏற்படும் பயிர் இழப்புகளுக்கு இழப்பீடு வழங்கி பாதுகாக்கவும், அவர்களின் பண்ணை வருவாயை நிலைப்படுத்தவும் புதுப்பிக்கப்பட்ட பிரதம மந்திரியின் பயிர் காப்பீட்டுத் திட்டம் தஞ்சாவூர் மாவட்டத் தில் செயல்படுத்தப்பட்டு வருகிறது. தஞ்சாவூர் மாவட்டத்தில், நிகழ் கோடைப்பருவத்தில் பயிர் காப்பீட்டு திட்டத்தை செயல்படுத்த இப்கோ டோக்கியோ பொது காப்பீடு நிறுவனமும், பியூச்சர் ஜென ராளி இந்தியா இன்சூரன்ஸ் கம்பெனி - நிறுவனமும் தேர்வு செய்யப்பட்டுள்ளது. 2023-24 ஆம் ஆண்டில், ராபி பருவத்தில் கோடை நெல் மற்றும் நெல் தரிசில் உளுந்து, எள் பயிர் ஆகியவற்றுக்கு பயிர் காப்பீடு செய்ய அறி விக்கப்பட்டுள்ளன. நெல் தரிசில் உளுந்து சாகுபடி செய்துள்ள விவசாயி கள் ஏக்கருக்கு ரூ.82 பிரீமியத்தை பிப்.15 ஆம் தேதிக்குள் ளும், கோடை நெல் சாகுபடி செய்துள்ள விவசாயிகள் ஏக்க ருக்கு ரூ.542 பிரீமியத்தை மார்ச் 15 ஆம் தேதிக்குள்ளும், எள் சாகுபடி செய்துள்ள விவசாயிகள் ஏக்கருக்கு ரூ.212 பிரீமியத்தை மார்ச் 15 ஆம் தேதிக்குள்ளும் செலுத்த வேண்டும். இத்திட்டத்தின்கீழ் காப்பீடு செய்ய விரும்பும் விவசாயி கள் தொடக்க வேளாண் கூட்டுறவு கடன் சங்கங்கள் மூலமா கவோ, தேசிய மயமாக்கப்பட்ட வங்கிகள் மூலமா கவோ, இ-சேவை மையங்கள் மூலமாகவோ பதிவு செய்து கொள்ளலாம். விவசாயிகள் இத்திட்டத்தின்கீழ் பதிவு செய்யும்போது முன்மொழிவு விண்ணப்பத்துடன் பதிவு விண்ணப்பம், கிராம நிர்வாக அலுவலர் வழங்கும் அடங்கல் சான்று (பசலி 1433), வங்கிக் கணக்கு புத்தகத்தின் முதல் பக்க நகல், ஆதார் அட்டை நகல் ஆகியவற்றை இணைத்து காப்பீடு செய்து கொள்ள வேண்டும்” என்றார்.
பிப்.16 வேலைநிறுத்தத்தை விளக்கி பிரச்சாரம்
திருச்சிராப்பள்ளி, பிப்.12 - விலைவாசி உயர்வை கட்டுப்படுத்த வேண்டும். உணவு, மருந்துகள், இயந்திரங்கள், விவசாய இடுபொருட்கள் மீதான ஜிஎஸ்டியை நீக்க வேண்டும். பெட் ரோலிய பொருட்கள், சமையல் எரிவாயு மீதான கலால் வரியை குறைக்க வேண்டும். பழைய ஓய்வூதியத் திட்டத்தை அமல்படுத்த வேண்டும் என்பன உள்ளிட்ட 24 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி அனைத்து மத்திய தொழிற்சங்கங்களின் கூட்டுக்குழு சார்பில் பிப்ரவரி 16 அன்று அகில இந்திய வேலைநிறுத்தம் மற்றும் மறியல் போராட்டம் நடைபெற உள்ளது. இதுகுறித்த மக்கள் சந்திப்பு தெருமுனை பிரச்சாரம் திருச்சி தென்னூர் பகுதியில் சனிக்கிழமை நடந்தது. பிரச்சாரத்திற்கு தொமுச மாவட்டச் செயலாளர் ஜோசப் நெல்சன் தலைமை வகித்தார். கோரிக்கைகளை விளக்கி மாவட்டச் செயலாளர்கள் சிஐடியு ரெங்கராஜன், ஏஐடியுசி சுரேஷ், எல்பிஎப் தெய்வீகன், எல்டிசியு கார்த்திகேயன், எச்எம்எஸ் மாநிலச் செயலாளர் ஜான்சன், ஐஎன்டியுசி மாவட்ட தலைவர் வெங்கட்ராமன், ஏஐசிசிடியு மாநிலச் செயலாளர் தேசிகன், போக்குவரத்து தொழிலாளர் சங்க ஜெயராமன், சிஐடியு மாவட்ட நிர்வாகி சந்திரன் ஆகி யோர் பேசினர். இதேபோன்று உறையூர் குறத்தெரு பகுதியில் தெரு முனை பிரச்சாரம் நடந்தது.
கழிவறை, சுற்றுச்சுவர் வசதி கோரி பள்ளி மாணவர்கள் போராட்டம்
அறந்தாங்கி, பிப்.12 - மேற்பனைக்காடு அரசு மேல்நிலைப் பள்ளியில் கழி வறை, சுற்றுச்சுவர் உள்ளிட்ட அடிப்படை வசதிகள் இல்லை எனக் கூறி மாணவ-மாணவிகள் வகுப்புகளை புறக்கணித்து போராட்டத்தில் ஈடுபட்டனர். புதுக்கோட்டை மாவட்டம் மேற்பனைக்காடு கிராமத்தில் அரசினர் மேல்நிலைப் பள்ளி செயல்பட்டு வருகிறது. 6 முதல் 12 ஆம் வகுப்பு வரை 400-க்கும் மேற்பட்ட மாணவ-மாணவி கள் இப்பள்ளியில் படித்து வருகின்றனர். இங்கு இரண்டு கழிப்பறை கட்டிடம் இருக்கும் நிலையில், அது மாணவி களுக்கு போதுமானதாக இல்லாத சூழல் உள்ளது. இதனால் மாணவர்கள் திறந்தவெளியிலேயே இயற்கை உபாதை களை கழித்து வரும் அவலநிலை ஏற்பட்டுள்ளது. இவர்களுக்கு போதுமான கழிப்பறைகள் இல்லாத தால், கடந்தாண்டு ஏப்ரல் மாதம் பள்ளி வளாகத்திற்குள் மாணவ-மாணவிகள் பயன்பாட்டிற்காக கழிப்பறை கட்டிடம் கட்டும் பணி தொடங்கியது. ஏறத்தாழ ஓராண்டு கடந்து விட்ட நிலையில் இன்னும் அந்த பணிகள் முடிக்கப்பட வில்லை. இதனால் மாணவ, மாணவிகள் திங்களன்று காலை முதல் வகுப்புகளை புறக்கணித்து, பள்ளிக்கு வெளியே மரத்தடியில் அமர்ந்தவாறு போராட்டத்தில் ஈடுபட்டனர். மதிய உணவு இடைவேளை நேரத்திலும் உணவு சாப்பிட செல்லா மல், உணவை புறக்கணித்து மாணவர்கள் காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர். தகவலறிந்து சம்பவ இடத்திற்கு வந்த அதிகாரிகள், கழிப்பறை பணியை உடனே துவங்கி மாணவர்கள் பயன்பாட் டிற்கு அளிப்பதாகவும், மார்ச் மாதம் சுற்றுச்சுவர் கட்டி தரப்படும் என்றும் உறுதியளித்தனர். இதையடுத்து மாண வர்கள் போராட்டத்தை கைவிட்டனர்.
இன்று திருவாரூர்-காரைக்குடி அதிவேக ரயில் சோதனை ஓட்டம்
தஞ்சாவூர், பிப்.12- திருவாரூர் - காரைக்குடி அதிவேக ரயில் சோதனை ஓட்டம் பிப்.13 (செவ்வாய்க்கிழமை) நடைபெறும் என தென்னக ரயில்வே அறிவித்துள்ளது. செவ்வாய்க்கிழமை பகல் ஒரு மணி முதல் மாலை 5 மணிக்குள் திருவாரூர்-காரைக்குடி இடையே ஓ.எம்.எஸ் அதிவேக ரயில் சோதனை ஓட்டம் நடைபெற இருக்கிறது. இந்த நேரத்தில் திருவாரூர் - பட்டுக்கோட்டை - காரைக்குடி இடையே 121 கிலோமீட்டர் வேகத்தில் சோதனை ரயில் செல்லும். எனவே, பொதுமக்கள் ரயில் பாதைகளை கடப்பதை யும், மூடியிருக்கும் ரயில்வே கேட்டுகளை கடப்பதையும், ரயில் பாதை அருகில் கால்நடைகள் மேய்ப்பதையும், செல்பி எடுப்பதையும் தவிர்க்க வேண்டும் என தெரிவிக்கப் பட்டுள்ளது.
வேங்கைவயல்: உண்மை கண்டறியும் சோதனை கோரும் மனு தள்ளுபடி
புதுக்கோட்டை, பிப்.12- வேங்கைவயல் விவகாரத்தில் 10 பேருக்கு உண்மை கண்டறியும் சோதனை நடத்தக் கோரும் சிபிசிஐடி போலீசாரின் மனுவை, மாவட்ட எஸ்சி, எஸ்டி வன்கொடுமைத் தடுப்புச் சட்ட சிறப்பு நீதிமன்றம் திங்கள்கிழமை தள்ளுபடி செய்தது. புதுக்கோட்டை மாவட்டம் வேங்கைவயல் பட்டியலினக் குடியிருப்பிலுள்ள மேல்நிலை நீர்த்தேக்கத் தொட்டியில் மனிதக் கழிவு கலக்கப்பட்ட சம்பவம் கடந்த 2022 டிச, 26-ஆம் தேதி தெரியவந்தது. இச்சம்பவத்தில் தற்போது விசாரணை மேற்கொண்டு வரும் சிபி சிஐடி போலீசார், சந்தேகத்துக்குரிய 10 பேரிடம் உண்மை கண்டறியும் சோதனை நடத்த முடிவு செய்தனர். இதுகுறித்து அனுமதி கோரும் மனுவை கடந்த 2023 டிசம்பரில் தாக்கல் செய்திருந்தனர். தொடர்ந்து பல முறை இம்மனு மீதான விசாரணை தள்ளி வைக்கப்பட்டு வந்தது. இந்த நிலையில் திங்கள்கிழமை விசாரணைக்கு வந்தபோது, மனுவைத் தள்ளுபடி செய்வதாக நீதிபதி எஸ். ஜெயந்தி உத்தரவிட்டார். உண்மை அறியும் சோதனை நடத்தக் கோரும் நபர்கள் 10 பேரும் தங்களுக்கு இதில் உடன்பாடு இல்லை எனத் தெரிவித்ததால் சிபி சிஐடி போலீசாரின் மனு தள்ளுபடி செய்யப்பட்டது குறிப்பிடத்தக்கது.