இயக்குநர் பாரதி கிருஷ்ணகுமார் பேச்சு
எழுத்துதான் நமது முன்னோர் களின் வரலாற்றை ஆவணப் படுத்தி வந்துள்ளது என்றார் எழுத் தாளரும், ஆவணப்பட இயக்குநரு மான பாரதி கிருஷ்ணகுமார். புதுக்கோட்டை மாவட்ட நிர்வா கமும், தமிழ்நாடு அறிவியல் இயக்கமும் இணைந்து நடத்தி வரும் 7 ஆவது புத்தகத் திருவிழா வின் 2 ஆம் நாளான ஞாயிற்றுக் கிழமை மாலை நடைபெற்ற நிகழ்ச்சியில், ‘எழுத்தென்ப...’ என்ற தலைப்பில் அவர் பேசிய தாவது: இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முந்தைய மொழிகளான கிரேக்கம், லத்தீன், ஹீப்ரு, சீனம், சமஸ்கி ருதம், தமிழ் ஆகிய 6 மொழிகளில் சீனமும் தமிழும் மட்டுமே மனி தர்கள் பேசும்- உயிர்ப்புடன் இருக் கும் மொழிகளாகும். கீழடியில் வெளிப்பட்ட ஆய்வில் தான், தமிழின் வயது 3,500 ஆண்டு கள் எனத் தெரியவந்துள்ளது. அதற்கு அடிப்படை, அங்கிருந்து எடுக்கப்பட்ட பானை ஓடு, அதில் எழுதப்பட்ட எழுத்து. எழுத்து தான் மொழியை காத்து வந்துள் ளது. வரலாற்றை ஆவணப்படுத்தி யுள்ளது. எழுத்து மயக்கமில்லா தது; தீர்மானிக்கப்பட்டது. 3,500 ஆண்டுகளாக தமிழ் உயிர்ப்புடன் இருக்கிறதென்றால், அப்போது எழுதி வைக்கப்பட்ட எழுத்துதான் காரணம். உலக அறிஞர் மார்க்கோ போலோ தனது பயண அனுப வங்களை விலங்கின் தோலில்தான் எழுதி னார். யாரெல்லாம் அந்தப் புத்தகத்தை காசு கொடுத்து கேட்டார் களோ, அவர்களுக்கு விலங்கின் தோலில் ஒவ் வொரு முறையும் எழுதி எழுதிக் கொடுக்கப்பட்டது. உலகின் அதிக பிரதிகள் விற்பனையானது மார்க்கோ போலோவின் நூல்தான். மண்ணில், சுட்ட மண்ணில், ஓட்டில், கல்லில், காகிதத்தில் எழுதப் பட்ட எழுத்துகள்தான் நம் வரலாறு. 5 ஆம் நூற்றாண்டிலேயே சீனர் கள் காகிதத்தைக் கண்டுபிடித்து விட்டார்கள். உலகுக்குச் சொல்ல வில்லை. அரேபியர்கள் வணிகத் துக்காக சென்ற போது காகிதம் தயாரிக்கப்படும் தொழில்நுட் பத்தை அறிந்து வந்து தயாரிக்கத் தொடங்கினர். உலகின் வேறெங்கும் இல்லாத வகையில் பனை ஓலையில் எழு தும் தொழில் நுட்பத்தை அறிந்த வர்கள் தமிழர்கள். பனை ஓலை யின் நடு நரம்பின் பக்கத்தில் எழு தினால் தான், அந்த எழுத்து பக்க வாட்டில் ஏற்படும் வெடிப்புகளால் சேதமடையாமல் இருக்கும். அந்த நடுப்பகுதிக்குப் பெயர் இலக்கு. அதிலிருந்து ‘இலக்கியம்’ என்ற பெயர் வந்திருக்கலாம். புத்தன் ஒரு எழுத்தைக்கூட எழுதவில்லை. அவரது முதன்மை சீடர் ஆனந்தன் உள் ளிட்டோர் எழுதியதுதான் புத்த தத்துவங்கள், அதே போல நபிகள் நாயகம், இயேசு கிறிஸ்து, சாக்ரட்டீஸ் போன்ற வர்களும் எதையும் எழுத வில்லை. அவர்களின் கருத்து களை அவர்களின் சீடர்கள் எழுதி வைத்துள்ளனர். எல்லாம் ஆவணப்படுத்தப்பட்ட தாலேயே இன்றுவரை வரலா றாகப் பேசப்படுகிறது. நம் முன் னோர்களின் கலாச்சாரம், பண் பாடு, நாகரீகம், வரலாறு எல்லாமே எழுத்தின் மூலமாகத்தான் நமக்கு அறியக் கிடைக்கிறது. எல்லா மதத்தினரையும் சம மாகப் பாவிப்போம் என அசோகர் எழுதி வைத்த சொற்களுக்காகத் தான், அசோக சின்னத்தை தேசத் தின் சின்னமாக அம்பேத்கர் தேர்ந் தெடுத்தார். எனவே எழுத்து என்பது மொழி யின் ஆயுள், வரலாறு, கடந்த காலம், நிகழ்காலம், எதிர்காலம், பாரம்பரியம். எழுத்து நம்மை மேன்மைப்படுத்தும், தூய்மைப் படுத்தும், எல்லாத் துன்பங்களை யும் கடக்கச் சொல்லித் தரும் அந்த எழுத்தைக் காக்க வேண்டி யது நம்முடைய பொறுப்பு. இவ்வாறு பாரதி கிருஷ்ண குமார் பேசினார். நிகழ்ச்சிக்கு தாரா மருத்து வமனை பி.தனசேகரன் தலைமை வகித்தார். முன்னதாக அறிவியல் இயக்க மாவட்டச் செயலர் ம.வீர முத்து வரவேற்றார். இணைச் செய லர் ஆர்.பிச்சைமுத்து நன்றி கூறி னார். முன்னதாக பள்ளி மாண வர்களின் கலை நிகழ்ச்சி நடை பெற்றது.