districts

img

உலக ஈர நில தினம் அலையாத்தி காடுகளை பாதுகாக்க விழிப்புணர்வு நிகழ்ச்சி

மயிலாடுதுறை, பிப்.8-  மயிலாடுதுறை மாவட்டம், தரங்கம்பாடி வட்டம், ஆக்கூர் அருகேயுள்ள கடலோர கிராமமான சின்னங்குடி அரசினர் உயர்நிலைப்பள்ளியில் நியூஸ் என்கிற தொண்டு அமைப்பு சார்பில், உலக ஈர நில தினத்தையொட்டி அலையாத்தி காடுகளை பாதுகாப்போம் என்கிற விழிப்புணர்வு நிகழ்ச்சி புதனன்று மாலை பள்ளி வளாகத்தில் நடைப்பெற்றது.  மயிலாடுதுறை மாவட்டத்தில் உள்ள கடலோர கிராமங்களில் அலையாத்தி காடுகளை அமைத்து கடலரிப்பிலிருந்து இயற்கையையையும், மனித உயிர்களையும், சுற்றுச்சூழலையும் பாதுகாக்கும் விதமாக அலையாத்தி காடுகளை அமைத்து முறையாக பராமரிப்பதோடு, பொதுமக்கள் மற்றும் மாணவர்களிடம் தொடர்ந்து விழிப்புணர்வை ஏற்படுத்தும் பணிகளில் ஈடுப்பட்டு வருகிற நியூஸ் என்கிற தொண்டு அமைப்பு   அலையாத்தி காடுகளை பாதுகாக்கும் விதமாக பள்ளி மாணவர்களிடம் ஓவியப்போட்டி உள்ளிட்ட பல்வேறு போட்டிகளை நடத்தி, விழிப்புணர்வை ஏற்படுத்தி வருகிறது.  இந்நிலையில் உலக ஈர நில தினத்தையொட்டி, சின்னங்குடி அரசு உயர்நிலைப்பள்ளியில் நடந்த மாணவர்களுக்கான ஓவியப்போட்டி மற்றும்  விழிப்புணர்வு நிகழ்ச்சிக்கு பள்ளி தலைமையாசிரியர் சித்ரா தலைமை வகித்தார். நியூஸ் அமைப்பின் திட்ட மேலாளர் முது முனைவர். காளிதாசன் அலையாத்தி காடுகளின் பாதுகாப்பின் முக்கியத்துவம் மற்றும் அலையாத்தி காடுகள் சந்திக்கும் ஆபத்துகள் பற்றிய விழிப்புணர்வு உரையாற்றினார்.  முன்னதாக மாணவர்களிடையே நடத்தப்பட்ட ஓவியப்போட்டியில் வெற்றிபெற்ற மாணவர்களுக்கு பரிசுகள் வழங்கப்பட்டன. நிகழ்ச்சியில் பள்ளி ஆசிரியர்கள், அலுவலர்கள், சின்னங்குடி மீனவ பஞ்சாயத்து தலைவர்கள், சமூக ஆர்வலர்கள் கலந்து கொண்டனர். தொடர்ந்து, மஞ்சளாற்று பகுதியில் சதுப்பு நில மரக்கன்றுகளை பள்ளி மாணவர்கள் நட்டு வைத்து விழிப்புணர்வு முழக்கங்களை எழுப்பினர்.