districts

img

உலக கடல்பசு தின விழிப்புணர்வு பேரணி சர்வதேச கடல் பசு ஆராய்ச்சி மையமாக மனோரா திகழும்

அறந்தாங்கி/தஞ்சாவூர்,  மே 24 -

    உலக கடல்பசு தினம் மே 28 ஆம் தேதி கொண்டாடப்பட உள்ள நிலையில், இதுகுறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தும் நோக்கத்தில், கடந்த  மே 22 ஆம் தேதி ராமேஸ்வரத்தில் இருந்து, “கடற் பசுவை பாதுகாப்போம், கடலை பாதுகாப்போம்” என்ற முழக்கத்துடன், வன ஆர்வலர்கள் 70 பேர்  பங்கேற்ற இருசக்கர மோட்டார் வாகன விழிப்பு ணர்வு பேரணி தொடங்கியது.

     பாக்ஜலசந்திப் பகுதியில் காணப்படும், அபூர்வ கடல்வாழ் தாவர உண்ணி உயிரின மான கடற்பசுவை பாதுகாக்கும் நோக்கில், மனோ ராவை தலைமையிடமாகக் கொண்டு, தமிழ்நாடு  அரசு கடல் பசு பாதுகாப்பு மையத்தை ரூ.15 கோடி யில் அமைத்துள்ளது குறிப்பிடத்தக்கது.  

    உலக கடல் பசு தின பாதுகாப்பின் இரண்டாம்  நாள் பேரணி முத்துக்குடாவில் தொடங்கியது. இதில் இந்திய வனவிலங்கு நிறுவனம், புதுக் கோட்டை மாவட்ட வனத்துறை, கடலோர காவல் துறை, மீன்வளத்துறை மற்றும் உள்ளூர் மீனவர் களுடன் இணைந்து உலக கடல் பசு தினத்தை  முன்னிட்டு மோட்டார் சைக்கிள் பேரணியை நடத்தியது. 2 ஆம் நாள் நிகழ்ச்சி முத்துக்குடா வில் தொடங்கி மணமேல்குடி, கோடியக்கரை கடற்கரையில் முடிவடைந்தது. இதில் பங்கேற்ற வர்களுக்கு பரிசுகள் வழங்கப்பட்டன.

    இந்திய  வனஉயிர் நிறுவனத்தை சேர்ந்த அஜித்குமார், பிரவீன், மாவட்ட வன அலுவலர் கணேச லிங்கம், மணமேல்குடி வன அலுவலர் அன்பு மணி, கடலோர காவல் துறையினர், உள்ளூர் மீனவர்கள் என பலர் கலந்து கொண்டனர். மனோராவிற்கு வந்த பேரணி இராமநாதபுரம், முத்துக்குடா, மணமேல் குடி, கட்டுமாவடி, சேதுபாவாசத்திரம் வழியாக  புதன்கிழமை காலை தஞ்சாவூர் மாவட்டம், பேரா வூரணி அருகே உள்ள மனோராவில், பயணக் குழுவினரின் பேரணி நிறைவடைந்தது.  

    பேரணி நிறைவு நிகழ்ச்சியில் மாவட்ட வன அலுவலர் அகில் தம்பி கலந்துகொண்டு பயணக்  குழுவினரை வரவேற்று சால்வை அணிவித்து  பாராட்டினார். பின்னர், அவர் செய்தியாளர்களி டம் பேசுகையில், “மனோராவில் கடற்பரப்பு பாது காப்பு மையம் அமைக்க இடம் தேர்வு செய்யப் பட்டு தமிழ்நாடு அரசால் 15 கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

   எதிர்காலத்தில் இந்தப் பகுதி சர்வதேச அளவிலான கடல் பசு ஆராய்ச்சி மையமாக திகழும். கடற்பசு தின கொண்டாட்டத்தின் ஒரு பகுதியாக பள்ளி, கல்லூரி மாணவ, மாணவிகளுக்கு ஓவியம் வரைதல் உள்ளிட்ட பல்வேறு போட்டிகள் நடத்தப் பட்டு பரிசுகள் வழங்கப்பட உள்ளன” என்றார்.

     இந்நிகழ்வில், வைல்ட் லைப் இன்ஸ்டிட்யூட் ஆப் இந்தியா நிறுவனத்தின் நிர்வாகி சுவேதா ஐயர், ஓம்கார் பவுண்டேஷன் நிறுவனர் பாலாஜி,  இணை இயக்குநர் சுமந்தா, மேலாளர் அன்பு, கடலோர பாதுகாப்பு குழும உதவி ஆய்வாளர் ஆர்.  சுப்பிரமணியன், காவலர் அந்தோணி தேவராஜ், மீன்வளத்துறை ஆய்வாளர் கெங்கேஸ்வரி, மேற்பார்வையாளர் (சாகர் மித்ரா) பரணிதரன், பட்டுக்கோட்டை வனச்சரகர் குமார், உதவி வனச் சரகர் சிங்காரவேலு, மணமேல்குடி வனவர்  எஸ்.அன்புமணி, மணமேல்குடி வேட்டை தடுப்பு காவலர் எஸ்.முத்துராமன், சரபேந்திரராஜன் பட்டி னம் ஊராட்சி மன்ற தலைவர் ஜலீலா பேகம்  முகமது அலி ஜின்னா மற்றும் சமூக ஆர்வலர் கள், மீனவர்கள் கலந்து கொண்டனர்.