அறந்தாங்கி, செப்.17 - புதுக்கோட்டை மாவட்டம் ஆவுடையார்கோவில் அரசு மேல்நிலைப் பள்ளியில் தலைமை ஆசிரியர் தாமரைசெல்வன் தலைமையில், உலக ஓசோன் தினத்தையொட்டி ஓசோன் தினம் கொண்டாடப்பட்டது. சுற்றுச்சூழல் ஒருங்கிணைப்பாளர் செந்தில்குமார், ஓசோன் படலம் பற்றியும் அதனால் ஏற்படும் நன்மைகள் பற்றியும், நம்மை காக்கும் ஓசோன் படலத்தில் நமது மனித இனத்தால் தற்போது ஏற்படும் பாதிப்பு பற்றியும், அதனை எவ்வாறு தடுப்பது என்பது பற்றியும் எடுத்துரைத்தார். இந்நிகழ்வில் உதவி தலைமையாசிரியர் ஸ்டாலின் உள்ளிட்ட அனைத்து ஆசிரியப் பெருமக்களும் மாணவ-மாணவிகளும் கலந்து கொண்டனர்.