மயிலாடுதுறை, ஏப்.22-
மயிலாடுதுறை மாவட்டம் தரங்கம்பாடி அருகேயுள்ள கடலோர கிராமமான சந்திர பாடியில் உலக புவி நாளையொட்டி நியூஸ் (Nature Environment and Wildlife Society (NEWS)) எனும் தன்னார்வ அமைப்பு சார்பில் அலையாத்தி காடுகளை பாதுகாப் போம் என்கிற விழிப்புணர்வு பேரணி சனி யன்று நடைபெற்றது.
சந்திரபாடி அரசினர் உயர்நிலைப் பள்ளி அருகிலிருந்து துவங்கிய பேரணியில் 200- க்கும் மேற்பட்ட மாணவர்கள், சமூக ஆர்வலர்கள், கிராம பொறுப்பாளர்கள், பொதுமக்கள், தலைமை ஆசிரியர் மற்றும் ஆசிரியர்கள் கலந்துகொண்டு விழிப்புணர்வு பதாகைகளை ஏந்தியவாறு ஊரின் முக்கிய வீதிகள் வழியாக வந்தனர். பேரணியை ஊராட்சி மன்ற தலைவர் பிரமிளா ராஜ் குமார் துவக்கிவைத்தார்.
முன்னதாக, அலையாத்தி காடுகளை பாதுகாப்போம் என்ற விழிப்புணர்வு பலகை யையும், அமைப்பின் பலகையையும் ஊராட்சி தலைவர் திறந்து வைத்தார்.