சேலம் ரயில்வே கோட்ட அலுவலகம் முன்பு தொழிலாளர்கள் வியாழனன்று கொண்டாட்டத்தில் ஈடுபட்டனர். இதில் சிபிஎம் மாநில செயற்குழு உறுப்பினர் டி.ரவீந்திரன், மாவட்டச் செயலாளர் மேவை.சண்முகராஜா, சிஐடியு சாலைப் போக்குவரத்து சங்க மாநிலத் துணைத்தலைவர் எஸ்.கே.தியாகராஜன், சிஐடியு மாவட்டச் செயலாளர் ஏ.கோவிந்தன், மாநிலக்குழு உறுப்பினர் ஆர்.வெங்கடபதி, டிஆர்இயு செயலாளர் அல்லிமுத்து, ஓய்வுபெற்ற ரயில்வே சங்க நிர்வாகிகள் சாம்பசிவன், சி.முருகேசன், மற்றும் டிஆர்இயு-விற்கு ஆதரவளித்த ஒன்பது தொழிற்சங்க நிர்வாகிகள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.