districts

img

கந்தர்வகோட்டை எம்எல்ஏ அலுவலகத்தில் மகளிர் உரிமைத் தொகை மேல் முறையீடு சிறப்பு முகாம்

புதுக்கோட்டை, அக்.19-  புதுக்கோட்டை மாவட்டம் கந்தர்வ கோட்டை சட்டமன்றத் தொகுதி அலு வலகத்தில் மகளிர் உரிமைத்தொகை மேல்முறையீட்டு முகாம் நடைபெற்று வருகிறது. தமிழக அரசின் மகளிர் உரிமைத் தொகை வழங்கும் திட்டத்தில் தகுதி யான பயனாளிகள் ஆங்காங்கே சில ருக்கு கிடைக்கவில்லை என பல்வேறு பகுதிகளில் குற்றச்சாட்டு எழுந்து வரு கிறது. இந்நிலையில், மகளிர் உரிமைத் தொகைக்கு தகுதி இருந்தும் கிடைக் காதவர்களுக்கு உதவிடும் வகையில் கந்தர்வகோட்டை சட்டமன்றத் தொகுதி அலுவலகத்தில் இ-சேவை மையம் தொடங்கப்பட்டுள்ளது. மகளிர் உரி மைத் தொகை மட்டுமல்லாது பல்வேறு இணைய சேவைகளும் இந்த மையத்தில் வழங்கப்பட்டு வருகிறது. இந்த இ-சேவை மையத் திறப்பு விழா செவ்வாய்க்கிழமையன்று நடை பெற்றது. விழாவிற்கு திமுக வடக்கு மாவட்டச் செயலாளர் கே.கே.செல்லப் பாண்டியன் தலைமை வகித்தார். சிபிஎம் மாவட்டச் செயலாளர் எஸ்.கவி வர்மன் முன்னிலை வகித்தார். இ-சேவை மையத்தை மார்க்சிஸ்ட் கம் யூனிஸ்ட் கட்சியின் கந்தர்வகோட்டை சட்டப்பேரவை உறுப்பினர் எம்.சின்னத்துரை தொடங்கி வைத்தார்.  இந்நிகழ்ச்சியில் புதுக்கோட்டை வருவாய் கோட்டாட்சியர் எஸ்.முரு கேசன், கந்தர்வகோட்டை வட்டாட்சி யர் ராமசாமி, வருவாய் ஆய்வாளர் கண்ணன், சிபிஎம் மாவட்ட செயற்குழு உறுப்பினர் ஏ.ராமையன், திமுக வடக்கு ஒன்றியச் செயலாளர் மா.தமிழ்அய்யா, சிபிஎம் ஒன்றியச் செயலாளர்கள் வி. ரெத்தினவேல், கே.சித்திரைவேல் உள்ளிட்டோர் பங்கேற்றனர். இந்த இ-சேவை மையத்தால் தினந்தோறும் நூற்றுக்கணக்கானோர் பயனடைந்து வருகின்றனர்.