districts

img

டெல்டா மாவட்ட பள்ளி, கல்லூரிகளில் மகளிர் தின விழா

திருச்சிராப்பள்ளி, மார்ச் 8 - பெண்மையை போற்றும் விதமாக ஒவ்வொரு ஆண்டும் மார்ச்  8 அன்று சர்வதேச மகளிர் தினம் கொண்டாடப்படுகிறது.  இதையொட்டி திருச்சியில் பொதுத்துறை இன்சூரன்ஸ் தொழி லாளர்கள் புத்தூர் நால்ரோடு, திருச்சி அரசு மருத்துவமனை எதிரே  உள்ள பார்வை குறைபாடு உடைய மகளிர் அரசு மேல்நிலைப் பள்ளி யில் படிக்கும் 92 மாணவிகளுக்கு, பல்வேறு நலத்திட்ட உதவிகளை வழங்கினர். மேலும், பார்வைத் திறன்  குறைபாடு உடைய குழந்தைகளை ஊக்குவித்தனர். இந்நிகழ்வின் ஒருங்கிணைப்பா ளர் ஸ்ரீதரன் மற்றும் இன்சூரன்ஸ் தொழிலாளர்கள் பல கலந்து கொண்டனர். த.பே.மா.லு கல்லூரி மயிலாடுதுறை மாவட்டம், பொறையார் தபேமாலு கல்லூரி யில் மகளிர் தின விழா வெள்ளி யன்று கல்லூரி முதல்வர் ஜான்சன் ஜெயக்குமார் தலைமையில் நடை பெற்றது. விழாவில் சிறப்பு விருந்தி னராக எழுத்தாளர் பத்மாவதி பங்கேற்ற பல்வேறு போட்டிகளில் வென்றவர்களுக்கு பரிசுகளை வழங்கினார். முன்னதாக ரோட்டரி சங்கம் சார்பில் மாணவிகளுக்கு தையல் இயந்திரங்களை சங்கத்தின்  தலைவர் தொழிலதிபர் ஏ.கே.சந்துரு  வழங்கினார்.  ஸ்ரீவெங்கடேஸ்வரா பள்ளி  மார்ச் 8 சர்வதேச பெண்கள்  தினத்தையொட்டி புதுக்கோட்டை திருக் கோகர்ணம் ஸ்ரீவெங்கடேஸ்வரா மெட்ரிக். மேல்நிலைப் பள்ளியில்  உலக மகளிர் தின விழா வெள்ளிக் கிழமை கொண்டாடப்பட்டது. விழா வில், மாணவர்கள் சக மாணவி களுக்கு இனிப்பு வழங்கி மகளிர் தின வாழ்த்து தெரிவித்தனர்.  பாபநாசம் பாபநாசம் விவேகானந்தா சமூக  கல்வி சங்கம் சார்பில் உலக மகளிர்  தின விழா நடந்தது. திருவாரூர் மாவட்டக் கவுன்சிலர் சாந்தி தலைமை வகித்தார். சிறப்பு அழைப் பாளர்களாக பங்கேற்ற பாபநாசம் பேரூராட்சித் தலைவர் பூங்குழலி, பாரத ஸ்டேட் வங்கி கிளை மேலா ளர் ஜெயப்ரிதா ஆகியோர் பேசினர். விவேகானந்தா கல்வி சங்க செயலர் கண்ணதாசன் பணியாளர்களுக்கு தங்க நாணயம், ஊக்கத்தொகை வழங்கினார். இதில் ஏராளமான பெண்கள் பங்கேற்றனர்.  சாலியமங்கலம் விசா அறக் கட்டளை சார்பில் நடந்த மகளிர்  தின நிகழ்ச்சியில் பெண்களுக்கு பேச்சு, கோலம், மாறுவேடம் உள்ளிட்ட போட்டிகள் நடத்தப் பட்டு, பரிசு வழங்கப்பட்டது. அய்யம் பேட்டை பேரூர் திமுக அலுவல கத்தில் மகளிர் தின விழா நடந்தது.  மாவட்ட மகளிர் அணி சத்யபிரியா  தலைமை வகித்தார். அய்யம் பேட்டை பேரூராட்சி தலைவர் புனித வதி உட்பட பலர் கலந்து கொண்டனர்.

ஆண்களுக்கு இணையான ஊதியம் வழங்குக!

உழைக்கும் பெண்கள் ஒருங்கிணைப்பு குழு  சார்பில் சர்வதேச பெண்கள் தின சிறப்பு கருத்தரங்கம்  வியாழனன்று சிஐடியு திருச்சி மாவட்டக் குழு அலுவல கத்தில் நடந்தது. கருத்தரங்கிற்கு உழைக்கும் பெண்கள் ஒருங்கிணைப்பு குழு அமைப்பாளர் செல்வி  தலைமை வகித்தார். சிஐடியு மாநிலச் செயலாளர் தன லட்சுமி, உழைக்கும் பெண்கள் ஒருங்கிணைப்பு குழு  இணை அமைப்பாளர்கள் பிரமிளா, கல்யாணி, சிஐடியு மாவட்டத் தலைவர் சீனிவாசன், மாவட்டப் பொருளாளர் மணிகண்டன் ஆகியோர் பேசினர். ஆண்களுக்கு இணையான ஊதியம் வழங்க வேண்டும், அங்கன்வாடி, ஆஷா, மக்களை தேடி மருத்துவ பணியாளர்களுக்கு குறைந்தபட்ச சம்பளம் ரூ.26 ஆயிரம் வழங்கி நிரந்தரப்படுத்த வேண்டும். தரைக்கடை, கட்டுமானம் உட்பட அனைத்து முறை சாரா பெண் தொழிலாளர்களுக்கும் 55 வயதில் குறைந்த பட்ச ஓய்வூதியம் ரூ.3000 வழங்க வேண்டும்.  பெண்கள் அதிகமாக பணிபுரியும் மாநகராட்சி, மருத்துவமனை, ஆவின் உள்ளிட்ட இடங்களில் அவுட்சோர்சிங் காண்ட்ராக்ட் விடுவதை கைவிட்டு நிரந்தரப் பணியாளராக்க வேண்டும். பெண்கள் பணி புரியும் இடங்களில் பாலியல் புகார்களை விசாரிக்க கமிட்டி அமைக்க வேண்டும். பெண்கள்,- சிறுமிகள் -  தாழ்த்தப்பட்ட மலைவாழ் பெண்கள் மீதான வன்முறை  தாக்குதலுக்கு முடிவு கட்ட வேண்டும் என்பன  உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.  முன்னதாக இணை அமைப்பாளர் ராணி வர வேற்றார். கலைச்செல்வி நன்றி கூறினார்.