districts

உரிய நடைமுறைகளை கடைப்பிடிக்காமல் தரைக்கடைகளை அகற்ற கூடாது

திருச்சிராப்பள்ளி, ஜூலை 18 - திருவானைக்காவல் பகுதி சாலையோர வியா பாரிகள் மற்றும் தள்ளு வண்டி, தரைக்கடை சங்க (சிஐடியு) முதல் மாநாடு திரு வானைக்காவலில் ஞாயி றன்று நடைபெற்றது. மாநாட்டிற்கு பகுதி தலைவர் கோவிந்தன் தலைமை வகித்தார். வேலை அறிக்கையை செயலாளர் சுரேஷ் வாசித்தார். வரவு-செலவு அறிக்கையை பொருளாளர் செந்தில்குமார் சமர்ப்பித்தார். சிஐடியு மாநகர் மாவட்டச் செய லாளர் ரெங்கராஜன், சாலை யோர வியாபாரிகள் சங்க மாவட்டச் செயலாளர் செல்வி, மாவட்டத் தலைவர் கணேசன் ஆகியோர் சிறப்புரையாற்றினர். சிபிஎம் ஸ்ரீரங்கம் பகுதி செய லாளர் தர்மா, சிஐடியு ஒருங் கிணைப்பாளர் ரகுபதி ஆகி யோர் வாழ்த்துரை வழங்கி னர்.  பல ஆண்டுகளாக தரைக் கடை நடத்துபவர்களுக்கு அடையாள அட்டையை புதுப்பித்து தர வேண்டும். அடையாள அட்டை இல்லா தவர்களுக்கு கடை நடத்தும் இடத்தை குறிப்பிட்டு  அடையாள அட்டை வழங்க  வேண்டும். 2014 சட்டத்தின் படி உரிய நடைமுறைகளை கடைபிடிக்காமல் தரைக் கடைகளை அகற்ற கூடாது  என்பன உள்பட தீர்மானங் கள் நிறைவேற்றப்பட்டன.