districts

img

விரிவுரையாளர் இல்லாமல் மாணவர்கள் கல்வி பாதிப்பு

திருத்துறைப்பூண்டி, நவ. 17-  திருத்துறைப்பூண்டியை அடுத்துள்ள கொறுக்கை அரசு தொழில்நுட்பக் கல்லூரி யில் காலியாக உள்ள இரண்டு விரிவுரையா ளர் பணியிடங்களை நிரப்ப வேண்டும். காலிப் பணியிடங்களை நிரப்புவதில் கால தாமதம் செய்யும் கல்லூரி முதல்வரைக் கண்டித்தும் வியாழனன்று கல்லூரி முன்பு ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. வாலிபர் சங்க திருத்துறைப்பூண்டி  ஒன்றி யத் தலைவர் சி. வீரசேகரன்,  மாணவர் சங்க ஒன்றியச் செயலாளர் அனுஷ் மித்ரன் தலைமையில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில்  வாலிபர் சங்க மாவட்டத் தலைவர் ஏ.கே. வேலவன், மாணவர் சங்க மாவட்டச் செய லாளர் பா. ஆனந்த்,  தமிழ்மணி,  காமராஜ்,  மந்த்ராஜ், ஸ்ரீ சுந்தரி, ஒன்றியப் பொருளா ளர் பார்த்திபன்  உட்பட ஏராளமானோர் கலந்து கொண்டனர்.