கும்பகோணம், பிப்.21 - கும்பகோணம் மாநகரம் மேலக்கா வேரியை சேர்ந்த மாணவர் எஸ்.நபீஸ்அஹ மது நீட் தேர்வில் 618 மதிப்பெண்கள் பெற்று மதுரை அரசு மருத்துவக் கல்லூரியில் மருத்து வப் படிப்பை தொடங்க உள்ளார். இந்த மாண வருக்கு மேலக்காவேரி விண்மீன் நூலகத்தில் பாராட்டு கூட்டம் நடைபெற்றது. ஓய்வு பெற்ற காவல்துறை அதிகாரி அப்துல் ஜலீல் சால்வை யணிவித்து புத்தகங்களை பரிசளித்தார். கும்பகோணம் நகரம் மேலக்காவேரியை சேர்ந்த மாணவர் நபீஸ் அகமது, அண்மை யில் நடைபெற்ற நீட் தேர்வில் அதிக மதிப்பெண் (618/720) பெற்று மதுரை அரசு மருத்துவ கல்லூரியில் முதலாம் ஆண்டு மருத்துவக் கல்வி பயின்று வருகிறார். மாணவர் நபீஸ் அஹமதுக்கு பாராட்டுக் கூட்டம், மேலக்காவேரியில் உள்ள விண்மீன் நூலகத் தில் நடைபெற்றது. நிகழ்ச்சிக்கு விண்மீன் நூலக தலைவர் ஆசாத் அலி தலைமை வகித்தார். நயினா முகம்மது இறை வரவேற்றார். மாணவர் நபீஸ் அஹமதுக்கு ஓய்வு பெற்ற காவல்துறை அதிகாரி அப்துல் ஜலீல் பொன்னாடை அணி வித்து புத்தகங்களை பரிசளித்தார். கவிஞர் மு. அய்யூப்கான் நன்றி கூறினார்.