ஒக்கினாவா சோஜென்-ரியூ கராத்தே-டூ அசோசியேஷன் ஆப் இந்தியா சார்பில் கராத்தே தேர்வில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கு கருப்பு பட்டை மற்றும் சான்றிதழ் வழங்கும் நிகழ்ச்சி நடந்தது. தஞ்சாவூர் மாவட்டம் பாபநாசத்தில் நடந்த நிகழ்ச்சியில், முதலாவது கருப்பு பட்டையை தேவேஸ், அஜ்மல், நிதிஷ் உள்ளிட்ட மாணவர்களுக்கு தலைமைப் பயிற்சியாளர் ரென்சி ஜெயராஜ் வழங்கினார். சான்றிதழை ஊராட்சி ஒன்றியத் தொடக்கப் பள்ளி தலைமையாசிரியை சசிகலா வழங்கினார்.