districts

img

குடிநீருக்காக அலையும் மக்களின் தாகம் தீர்க்கப்படுமா?

பாபநாசம், ஆக.3 - தஞ்சாவூர் மாவட்டம் பாபநாசம் அருகே  பண்டாரவாடை ஊராட்சி, கோயில் தேவ ராயன் பேட்டை அக்கரையார் நகரில் நூற்றுக்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசிக் கின்றன.  இவர்கள் வசிக்கும் பகுதிக்கு குடிநீர் விநியோகம் செய்து ஒரு மாதத்திற்கு மேலா கிறது. இதனால் குடிநீருக்காக அவர்கள் அடுத்தடுத்த தெருக்களில் வீடு வீடாக அலைகின்றனர்.  இதுகுறித்து அவர்கள் கூறுகையில், “மோட்டார் பழுதின் காரணமாக ஒரு மாதமாக  தண்ணீர் வரவில்லை. அதை சரி செய்ய  ஊராட்சி நிர்வாகமும் தயாராக இல்லை. இதனால் நாங்கள் குடி நீருக்காக தெருத் தெருவாக-வீடுவீடாக அலைகிறோம். நாங்கள் வளர்க்கும் ஆடு, மாடுகளும் குடி நீரின்றி அவதிப் படுகின்றன. மாவட்ட நிர்வா கம்தான் இதில் உரிய கவனம் செலுத்த  வேண்டும்” என்றனர்.  இப்பகுதி மக்கள் மற்றும் கால் நடைகளின் தாகத்தை தீர்க்க மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்குமா?