districts

img

புதிய நீர்த்தேக்கத் தொட்டி பயன்பாட்டிற்கு வருமா?

பாபநாசம், ஜன.15 - தஞ்சாவூர் மாவட்டம் அய்யம்பேட்டை - கணபதி அக்ர ஹாரம் மெயின் சாலையில் ஏராளமான வாகனங்கள் சென்று வருகின்றன. இதில் காவிரி பாலம் அருகில் சாலையின் நடுவே  போக்குவரத்திற்கு இடையூறாக மேல்நிலை நீர் தேக்கத் தொட்டி உள்ளது. பயன்பாட்டில் உள்ள இதற்கு மாற்றாக, அதன் அருகிலேயே புதிதாக நீர் தேக்கத் தொட்டி  கட்டப்பட்டும், அது பயன்பாட்டிற்கு வராமல் உள்ளது. அதை பயன்பாட்டிற்கு கொண்டு வருவதுடன், சாலை நடுவே போக்குவரத்திற்கு இடையூறாக உள்ள நீர்  தேக்கத் தொட்டியை இடித்து அப்புறப்படுத்த அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். ஒப்பந்ததாரருக்கும், பஞ்சாயத்து போர்டுக்கும் நீர்தேக்கத் தொட்டிக்கு மின் இணைப்பு தருவது யார் என்ப தில் உள்ள போட்டியே, இந்த தாமதத்திற்கு காரணம் என்ற  கருத்தும் எழுந்துள்ளது. இதை உடனடியாக சரி செய்ய,  மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டுமென வும் கோரிக்கை வைக்கப்பட்டுள்ளது.