தஞ்சாவூர், ஆக.4-
பேராவூரணி அருகே ஊமத்தநாடு பெரிய ஏரி யில் காட்டாமணக்கு செடி களை அகற்றி, தூர்வார வேண்டும் என விவசாயி கள் கோரிக்கை விடுத்துள்ள னர்.
தஞ்சாவூர் மாவட்டம் பேராவூரணி அருகே உள்ள ஊமத்தநாடு கிராமத்தில் உள்ள பெரிய ஏரி, விவசாய நிலங்களுக்கு மத்தியில் 354 ஏக்கர் பரப்பளவில் அமைந் துள்ளது. இக்குளத்தின் தண்ணீரை கொண்டு, அப்பகுதி விவசாயிகள் ஆயி ரத்திற்கும் மேற்பட்ட ஏக்கர் பரப்பளவிற்கு நேரடியாக வும், மோட்டார் மூலமாக வும் ஊமத்தநாடு சுற்று வட்டார கிராமப் பகுதிகளில் விவசாயம் செய்து வருகின்றனர்.
இந்நிலையில், பெரிய ஏரி 30 ஆண்டுகளுக்கு மேலாக தூர்வாரப்படாமல் உள்ளது. பல ஆயிரம் ஏக்கர் பாசனத்திற்கு, பயன் பட்டு வந்த இந்த பெரிய ஏரி, தற்போது வறண்டு போய் கிடக்கிறது. விவசா யத்திற்கும், கால்நடைகள் தாகம் தணிக்கவும், நிலத்தடி நீர்மட்டம் குறையாமல், ஆழ் துளைக் கிணறுகளுக்கு முக்கிய நீராதாரமாகவும் விளங்கிய இந்த ஏரி, தண்ணீர் இல்லாமல் இருப்பது கவலையளிக் கிறது.
ஆயிரம் ஏக்கர் விளை நிலங்கள் பாசன வசதி பெற்று வந்த நிலையில், கடந்த 10 ஆண்டுகளுக்கும் மேலாக ஏரியின் நீர்ப்பிடிப்புப் பகுதி களில் காட்டாமணக்கு செடி கள் அதிக அளவில் வளர்ந் துள்ளன. கரையில் அமைந் துள்ள மதகுகளும் சிதைந்து காணப்படுகின்றன. பொதுப் பணித்துறைக்கு சொந்த மான இந்த ஏரி, பல ஆண்டுகளாக சீரமைக்கப் படவில்லை. இதனால் ஆயி ரம் ஏக்கர் விளை நிலங்க ளின் விவசாயிகள், விவசா யம் செய்ய முடியாமல் உள்ளனர்.
இது ஏரியிலிருந்து விவ சாயத்திற்கு நீர் கிடைக்குமா என்பது விவசாயிகளின் கேள்வியாக உள்ளது. எனவே, மாவட்ட நிர்வாக மும், பொதுப்பணித்துறை அதிகாரிகளும் ஏரியை தூர்வார நடவடிக்கை எடுக்க வேண்டுமென விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.