மயிலாடுதுறை மாவட்டம் கொள்ளிடம் அருகே அளக் குடி ஊராட்சி காடுவெட்டி கிராமத்தில் நூற்றுக்கும் மேற்பட்ட குடும்பங்களைச் சேர்ந்தவர்கள் வசித்து வரு கின்றனர். இந்தக் கிராமத்தில் நிலத்தடிநீர் உப்பு நீராக மாறிவிட்டதால் அதைப் பயன்படுத்த முடியவில்லை. கொள்ளிடம் கூட்டுக் குடிநீரும் நான்கு நாட்களுக்கு ஒரு முறை மட்டுமே வருகிறது. தண்ணீர் பற்றாக்குறையால் தவிக்கும் மக்கள் சைக்கிள், இருசக்கர வாகனங்கள் மூல மும், பெண்கள் இரண்டு கி.மீ நடந்து சென்றும் தண்ணீர் பிடிக்கின்றனர்.