பாபநாசம், நவ.1 - தஞ்சாவூர் மாவட்டம் பாபநாசம் ஊராட்சி ஒன்றியத் தில் கொள்ளிடக் கரையை ஒட்டியுள்ளது கோவிந்த நாட்டுச்சேரி ஊராட்சி. இந்த ஊராட்சியில் 40 ஆண்டுகளைக் கடந்த மண்ணியாற்றுப் பாலம் பழு தடைந்து, எந்நேரத்திலும் இடியும் நிலையில் உள்ளது. இந்த ஊராட்சியைச் சேர்ந்த பட்டுக்குடி, கூடலூர், புத்தூர், குடிகாடு கிரா மங்களைச் சேர்ந்த மக்கள் மட்டுமல்லாது, அரு கிலுள்ள வீரமாங்குடி, உம்பளாப்பாடி ஊராட்சி களைச் சேர்ந்த மக்களும் இந்தப் பாலத்தை பயன் படுத்துகின்றனர். ஏராள மான வாகனங்களும் இந்தப் பாலம் வழியே சென்று வரு கின்றன. கொள்ளிடத்தில் தண்ணீர் இல்லாத போது, அரியலூர் மாவட்டத்தைச் சேர்ந்த மக்கள் தொழில், வேலைவாய்ப்பு, கல்விக் காக கரையை கடந்து, இந்தப் பாலத்தின் வழியே வருகின்றனர். இந்நிலையில், இந்தப் பாலம் இடியுமானால் போக்குவரத்து துண்டிக்கப் படும். எனவே ஆயிரக் கணக்கான மக்களின் நலன் கருதி இந்தப் பாலத்தை இடித்துவிட்டு, புதிதாக, தரமாக பாலத்தை கட்ட வேண்டும் என்கின்றனர் அப்பகுதி மக்கள்