districts

img

பள்ளி பெயர்ப் பலகையில் மாவட்டத்தின் பெயர் மாற்றப்படாதது ஏன்?

மயிலாடுதுறை, ஜூலை 1 - மயிலாடுதுறை மாவட்டம் தரங்கம்பாடி வட்டத்திற்குட்பட்ட சங்கரன்பந்தல் அரசினர் மேல்நிலைப் பள்ளி பெயர் பலகையில் மாவட்டத்தின் பெயர் மாற்றப்படாமல் இருப்பதால் குழப்பம் ஏற்பட்டுள்ளது.  நாகப்பட்டினம் மாவட்டத்திலிருந்து பிரிந்து, மயிலாடுதுறை தனி மாவட்டமாக உருவாக்கப்பட்டு 4 ஆண்டுகளாக ஆன பின்பும், தரங்கம்பாடி வட்டம் சங்கரன்பந்தல் அரசினர் மேல்நிலைப் பள்ளி மட்டும் இன்னமும் நாகப்பட்டினத்திலேயே இருப்பதால், பெயர் பலகையை காண்போர் மத்தியில் குழப்பம் ஏற்படும் நிலை உள்ளது. மேலும், பள்ளியில் இன்னமும் மாவட்டத்தின் பெயர் மாற்றப்படாதது ஏன் என பல்வேறு தரப்பினரும் கேள்வி எழுப்புகின்றனர்.

;