இராமநாதபுரம்,ஜூன் 18-
மீன்பிடி தடைக்காலம் முடி யும் முன்னரே கடலுக்குச் செல்லும் விசைப்படகுகாரர்கள் ஆண்டு தோறும் செய்யும் தவறை மீன் வளத்துறை நிர்வாகம் கண்டு கொள்ளாமல் இருப்பது ஏன்? என்று சிஐடியு மீன்பிடி தொழிற் சங்க கூட்டமைப்பு கேள்வி எழுப்பி யுள்ளது.
இதுகுறித்து தமிழ்நாடு மீன்பிடி தொழிற்சங்க கூட்டமைப்பு (சிஐ டியு) மாநில செயல் தலைவர் எம்.கருணாமூர்த்தி வெளியிட்டுள்ள அறிக்கை வருமாறு:
பாக்ஜலசந்தி கடல் பகுதியில் இராமேஸ்வரம் முதல் நாகை மற்றும் காரைக்கால் வரையிலான சுமார் 6 மாவட்டங்களைச் சேர்ந்த விசைப்படகுகள் ஆண்டு தோறும் மீன்பிடி தடை காலம் முடிந்து கட லுக்கு செல்வது என்பது காலை 6 மணிக்கு மேல்தான் என்ற அரசின் சட்ட ஒழுங்குமுறையானது ஆண்டு தோறும் மீறப்படுவதை இந்த ஆண்டாவது ஒழுங்குபடுத்த வேண்டும் என்று சிஐடியு கடல் தொழிலாளர் சங்கம் சார்பில் கடந்த 9-6-2023 அன்று நடைபெற்ற இராம நாதபுரம் மாவட்ட ஆட்சியரின் மீன வர் குறை தீர்க்கும் நாளில் வலி யுறுத்தியிருந்தோம். .
மேலும் இது இராமநாதபுரம் மாவட்டத்தில் மட்டும் அமல்படுத்தி னால் போதாது. பாக்ஜலசந்தி கடல்பகுதியின் இதர மாவட்டங்க ளிலும் அமல்படுத்தப்பட வேண் டும் என்பதையும் வலியுறுத்தியிருந் தோம்.
அதற்கு சம்மந்தப்பட்ட 6 மாவட்ட ஆட்சியர்களிடமும் இராம நாதபுரம் மாவட்ட ஆட்சியர் தொடர்பு கொண்டு பேசுவது அவசி யம் என்பதையும் வலியுறுத்தி யிருந்தோம். தேவைப்பட்டால் தமி ழக அரசின் தலைமை செயலாளர், தமிழக மீன்வளத்துறையின் அரசு செயலாளர், ஆணையாளரின் கவ னத்திற்கும் கொண்டு சென்று நட வடிக்கை மேற்கொள்ள வேண்டும் என்றும் வலியுறுத்தியிருந்தோம்.
அதனை தொடர்ந்து மாவட்ட ஆட்சியர் உரிய நடவடிக்கை மேற் கொள்வதாக உறுதியும் அளித்தி ருந்தார்.
ஆனால் வழக்கம் போல் இது போன்ற உத்தரவாதம் நிறைவேற் றப்படுவதற்கான எந்தவொரு ஆக்கப்பூர்வமான நடவடிக்கை யையும் மாவட்ட ஆட்சியர் நிர்வாக மும் சரி! மாவட்ட மீன்வளத்துறை நிர்வாகமும் மேற்கொள்ளவில்லை என்பது தெரிகிறது.
பொதுவாக இது போன்ற நட வடிக்கை மேற்கொள்வதானால் முதலில் ஐஸ் பிளாண்டுகளில் இருந்து ஐஸ் கட்டிகள் அதிகாலை 1 மணிக்கு மேல்தான் விநியோ கிக்கப்பட வேண்டும் என்ற உத்தரவு பிறப்பித்திருக்கப்பட்டிருக்க வேண்டும்.
ஆனால் அது போன்ற உத்தரவு ஏதும் பிறப்பிக்கப்படாத தால் முன்கூட்டியே ஐஸ் கட்டி களை விசைப்படகுதாரர்கள் வாங்கி ஐஸ் பெட்டிகளில் ஸ்டோ ரேஜ் செய்து வைத்து விட்டனர். இதன் மூலம் வழக்கம் போல் அர சின் சட்ட ஒழுங்குமுறையை மீறி வெள்ளியன்றே மாலை 4 மணிக்கு மேல் கடலுக்கு செல்வதை உறுதி செய்து விட்டனர்.
எனவே நடைபெற உள்ள இந்த தவறுக்கு யார் காரணம் என் பதை அரசு நிர்வாகங்கள் தெளிவு படுத்த வேண்டும். இதனால் ஏற்பட வுள்ள பாதிப்புக்கு யார் பொறுப்பு என்பதையும் தெளிவுபடுத்த வேண்டும். மீன்வளத்துறையின் மீன்பிடி அனுமதிச் சீட்டு கூட பெறாமல் முன் கூட்டியே கடலுக்கு செல்வதால் அபரிமிதமாக கூடுதலாக கிடைக் கும் இறால், கணவாய், நண்டு, அக்டோபஸ் போன்ற ஏற்றுமதி மீன் இனங்களை வழக்கம் போல் கடல் உணவு ஏற்றுமதி செய்யும் நிறு வனங்கள் தங்களுக்குள் சிண்டி கேட் அமைத்துக்கொண்டு மிக குறைவான விலைக்கு கொள்முதல் செய்யும். மற்றொருபுறம் இந்த மீன் இனங்கள் பல படகுகளில் உள்ள முறையான ஸ்டோரேஜ் வசதி இன்மையால் பதம் குறைந்து வரு வதும் ஏற்படும் . இதனால் பலனடை வது ஏற்றுமதி நிறுவனங்கள் மட்டுமே. இந்த நிதர்சனமான உண்மை நிலை தெரிந்தும் இந்த தவறை விசைப்படகு தரப்பினர் ஆண்டு தோறும் செய்வதும் அதை மீன்வளத்துறை நிர்வாகம் கண்டுகொள்ள மறுப்பதும் நியாயம் தானா?
எனவே சம்பந்தப்பட்ட அரசு நிர்வாகங்கள் இப்போது நினைத் தால் கூட இந்த பாதிப்பில் இருந்து நம் மீனவர்களை பாதுகாக்க முடி யும். இவ்வாறு அதில் தெரிவித் துள்ளார்.