districts

img

எஸ்.குளவாய்ப்பட்டி மக்கள் தொடர்பு முகாமில் ரூ.1.20 கோடி மதிப்பில் நலத்திட்ட உதவிகள்

புதுக்கோட்டை, செப்.13-  புதுக்கோட்டை மாவட் டம், ஆலங்குடி வட்டம், எஸ். குளவாய்பட்டியில், மக்கள் தொடர்பு முகாம், மாவட்ட ஆட்சியர் ஐ.சா.மெர்சி ரம்யா தலைமையில் புதன கிழமை நடைபெற்றது.  இம்முகாமில் வரு வாய்த்துறை, ஆதிதிரா விடர் மற்றும் பழங்குடி யினர் நலத்துறை, பிற்படுத்  தப்பட்டோர் மற்றும் சிறு பான்மையினர் நலத்துறை, வேளாண்மை மற்றும் உழ வர் நலத்துறை, தோட்டக் கலைத்துறை, மகளிர் சுய உதவிக் குழு உள்ளிட்ட துறைகளின் சார்பில், 421  பயனாளிகளுக்கு ரூ.1,20, 18,383 மதிப்பீட்டில் பல்வேறு  அரசு நலத்திட்ட உதவி களை ஆட்சியர் வழங்கினார்.  மாவட்ட வருவாய் அலு வலர் மா.செல்வி, கோட்டாட் சியர் (பொ) க.ஸ்ரீதர், தனித்  துணை ஆட்சியர் (சமூக பாதுகாப்புத் திட்டம்) மு. செய்யது முகம்மது, திரு வரங்குளம் ஒன்றியக்குழுத் தலைவர் வள்ளியம்மை தங்கமணி, வட்டாட்சியர் விஸ்வநாதன் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.