அரியலூர் அரியலூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகக் கூட்டரங்கில் திங்கள்கிழமை நடைபெற்ற மக்கள் குறைகேட்புக் கூட்டத்தில் பயனாளி களுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கப் பட்டன. கூட்டத்துக்கு ஆட்சியர் பொ.ரத்தினசாமி தலைமை வகித்து, பொதுமக்களிடமிருந்து பெற்ற 200 கோரிக்கை மனுக்கள் மீது விசா ரணை மேற்கொண்டு நடவடிக்கை எடுக்கு மாறு சம்பந்தப்பட்ட அலுவலர்களுக்கு உத்தரவிட்டார். முன்னதாக அவர், கூட்டுற வுத் துறையின் மூலம், ஸ்ரீபுரந்தான் தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கத்தின் சார்பில் 5 பயனாளிகளுக்கு ரூ.4,84,800 மதிப்பிலான பயிர்க் கடனுதவிகள் மற்றும் கலை பண்பாட்டுத்துறை தமிழ்நாடு நாட்டு புறக் கலைஞர்கள் நலவாரியம் சார்பில் மூக்கு கண்ணாடி நிதியுதவி மற்றும் கல்வி நிதியுதவி என மொத்தம் 6 பயனாளிகளுக்கு ரூ.1,02,500 மதிப்பிலான காசோலைகளை வழங்கினார்.