districts

img

கல்வராயன் மலையில் அரசு முகாமில் 482 பேருக்கு நலத்திட்ட உதவிகள்

 கள்ளக்குறிச்சி, பிப்.13- கள்ளக்குறிச்சி மாவட்டம்,கல்வராயன் மலை வட்டத்தில் நடைபெற்ற மக்கள் தொடர்பு முகாமில் 482 பயனாளிகளுக்கு ரூ.44.71 லட்சம் மதிப்பீட்டில் நலத்திட்ட உதவிகள்  வழங்கியுள்ளதாக மாவட்ட ஆட்சியர் பிரசாந்த் தெரிவித்திருக்கிறார். கள்ளக்குறிச்சி மாவட்டம்,கல்வராயன் மலை வட்டம், தொரடிப்பட்டு கிராமத்தில் வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மைத் துறையின் சார்பில் மக்கள் தொடர்பு முகாம் மாவட்ட ஆட்சியர் பிரசாந்த் தலைமையில் நடைபெற்றது. சங்கராபுரம் தொகுதி சட்டமன்ற உறுப்பினர் உதயசூரியன் முன்னிலை வகித்தார். முகாமில் மாவட்ட வருவாய் அலுவலர் ஜீவா, கள்ளக்குறிச்சி வருவாய் கோட்டாட்சியர் லூர்து சாமி,வேளாண் இணை இயக்குநர் சத்தியமூர்த்தி,தனித் துணை ஆட்சியர் குப்புசாமி, கல்வராயன்மலை ஒன்றியக் குழுத் தலைவர் சந்திரன், ஒன்றியக் குழுத் தலைவர் பாச்சா பீ,கல்வராயன் மலை வட்டாட்சியர் சோமசுந்தரம்  உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.