districts

img

மார்க்சிஸ்ட் கட்சியில் இணைந்தவர்களுக்கு வரவேற்பு

தஞ்சாவூர், ஜன.9 - தஞ்சாவூர் மாவட்டம் ஒரத்தநாடு வட்டம்  நெய்வாசல் கிராமத்தைச் சேர்ந்த ஜி.இளங் கோவன், டி.அன்பழகன், யு.தியாகராஜன், டி. விஜயகுமார் ஆகிய 4 பேரும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியில் இணைந்தனர்.  ஒரத்தநாடு கட்சி அலுவலகத்தில், கட்சி ஒன்றியச் செயலாளர் எஸ்.கோவிந்தராஜ், தமிழ்நாடு விவசாயிகள் சங்க ஒன்றியச் செயலாளர் டி.மோகன்தாஸ், அகில இந்திய  விவசாயத் தொழிலாளர்கள் சங்க ஒன்றியச் செயலாளர் கு.பாஸ்கர் ஆகியோர் முன்னி லையில், கட்சி ஒன்றியக் குழு உறுப்பினர் ஆர். ரமேஷ் தலைமையில் கட்சியில் இணைந்தனர். கட்சியில் இணைந்தவர்களுக்கு கைத்தறி ஆடை அணிவித்து வரவேற்பு அளிக்கப்பட்டது.