மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் தஞ்சை மாவட்டச் செயற்குழு உறுப்பினர் கோ.நீலமேகம் - காவல் உதவி ஆய்வாளர் மா.சித்ரா ஆகியோரின் மகன் நீ.ஆனந்த் கோபாலன், சேலம் மு.தண்டபாணி - த.லீலா ஆகியோரது மகள் த.கோகிலா ராணி திருமணம் வியாழக்கிழமை தஞ்சாவூர் வ.உ.சி நகர் தீர்க்க சுமங்கலி மகாலில் நடைபெற்றது. கட்சியின் அரசியல் தலைமைக் குழு உறுப்பினர் ஜி.ராமகிருஷ்ணன் தலைமையேற்று திருமணத்தை நடத்தி வைத்தார். இதில் திமுக மூத்த தலைவர், முன்னாள் அமைச்சர் எஸ்.என்.எம்.உபயதுல்லா, சிபிஎம் மாவட்டச் செயற்குழு உறுப்பினர்கள், மாவட்டக் குழு உறுப்பினர்கள், மாநகரச் செயலாளர், ஒன்றியச் செயலாளர்கள் உட்பட பல்வேறு அரசியல் கட்சியினர் பங்கேற்று மணமக்களை வாழ்த்தினர். மாநிலக்குழு உறுப்பினர் சாமி.நடராஜன் நன்றி கூறினார்.