districts

img

எங்களுக்கு குடியிருக்க வீடு வேண்டும் கூத்தாடிவயல் நரிக்குறவர் இன மக்கள் கோரிக்கை

புதுக்கோட்டை,  அக்.9 - புதுக்கோட்டை மாவட் டம் அறந்தாங்கி அருகே யுள்ள கூத்தாடிவயலைச் சேர்ந்த நரிக்குறவர் இன மக்கள் தங்களுக்கு அரசு  குடியிருப்பு கட்டித்தரக் கோரி மாவட்ட ஆட்சிய ரிடம் கோரிக்கை மனு அளித் தனர். புதுக்கோட்டை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் திங்கள்கிழமை நடை பெற்ற மக்கள் குறைகேட்பு  கூட்டத்தில் ஆட்சிய ரிடம் அவர்கள் அளித்துள்ள  மனுவில் கூறப்பட்டுள்ள தாவது: அறந்தாங்கி அருகே கூத்தாடிவயலில் கடந்த 1972-இல் எம்ஜிஆர் முதல் வராக இருந்த காலத்தில் எங்களுக்கு வீடுகள் கட்டித் தரப்பட்டன. இத்தனை ஆண்டுகளுக்குப் பிறகு அந்தக் குடியிருப்பு முழு மையாக பழுதடைந்து வசிப்பதற்கு பயனற்ற நிலை யில் உள்ளது. தற்போது ஒரே வீட்டுக்குள் 4 குடும்பங் கள் வரை வசிக்க வேண்டி  உள்ளது. எனவே பழுத டைந்த வீடுகளை இடித்து விட்டு, முழுமையாக அனை வருக்கும் அரசுக் குடியிருப்பு கட்டித்தர வேண்டும்.  இவ்வாறு அதில் குறிப் பிடப்பட்டுள்ளது. ஏற்கெனவே கடந்த 2021  முதல் ஒவ்வொரு ஆண்டும்  முதல்வரின் தனிப்பிரி வுக்கும், மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திலும் கோரிக்கை மனுக்களை தொடர்ந்து அளித்து வருவ தாகவும், ஒவ்வொரு முறை யும் அழைத்துப் பேசி, இது வரை எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை என தெரிவித்துள்ளனர்.