பாபநாசம், ஏப்.2- கோடைக்கால தண்ணீர் பந்தல் திறப்பு விழா திமுக சார்பில் பாபநாசத்தில் நடைபெற்றது. திமுக தஞ்சை வடக்கு மாவட்டப் பொறுப்பாளர் கல்யாண சுந்தரம் தண்ணீர் பந்தலை திறந்து வைத்து பொதுமக்களுக்கு இளநீர், தர்பூசணி, நீர், மோர், பழங்கள் உள்ளிட்டவற்றை வழங்கினார். பாபநாசம் ஒன்றியப் பொறுப்பாளர்கள் பலர் கலந்துக் கொண்டனர்.