திருச்சிராப்பள்ளி, ஜூலை 1-
திருச்சி மாவட்டம் சமயபுரம் கண்ண னூர் சிறப்புநிலை பேரூராட்சி கூட்டம் வெள்ளி யன்று நடந்தது. கூட்டத்தில் 5 ஆவது வார்டு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி கவுன்சிலர் சாந்தி பேசுகையில், “5 ஆவது வார்டு எல்லைக் குட்பட்ட பகுதிகளில் எந்த பணியும் நடை பெறவில்லை.
காமாட்சி அம்மன்கோவில் தெருவில் இருபுறமும் சாக்கடை வசதி, கழிப்பிடவசதி செய்து கொடுக்கவில்லை. சின்டெக்ஸ் அமைக்கவில்லை, பழைய டேங்க்கை பழுது பார்க்கவில்லை. தற்காலிகமாக பைப் இணைக்கப்படவில்லை. ராம் டீக்கடை அருகில் நீண்ட நாட்களாக தண்ணீர் கசிந்து வரும் சின்டெக்ஸ் டேங்க் இதுவரை சரி செய்யப்படவில்லை. அனைத்து தெருக்களிலும் உள்ள பழுத டைந்த சாக்கடைகளை சரிசெய்யவில்லை. கழிப்பறைகளில் பைப்புகள், தெருக்க ளில் மின்விளக்குகளை சரியாக பராமரிப்ப தில்லை. எஸ்.கள்ளுக்குடி முதல்தெரு மேற்கு பகுதியில் இருந்து வரும் தண்ணீர் விழும் வடிகால் இடத்தில் சரிசெய்து கல்வெட்டு அமைக்கப்பட வேண்டும்.
தங்கவேல் வீட்டு அருகில், கடைசிதெரு பலராமன் வீட்டு அருகில் மின்விசை பம்பு சின்டெக்ஸ் அமைக்க வேண்டும். ஜெயராமன் வீட்டருகில் படித்துறை அமைத்து கொடுக்க வேண்டும். இடு காட்டை முறையாக பராமரிக்க வேண்டும். அரிஜன தெரு மக்களுக்கு தட்டுப்பாடின்றி குடிநீர் வழங்க வேண்டும். பொதுமக்களின் அடிப்படை தேவைகள் குறித்து கூட்டத்தில் பலமுறை கூறியும், இதுவரை எவ்வித நடவ டிக்கையும் எடுக்காதது மற்றும் இப்பகுதியை புறக்கணிப்பதை கண்டித்து சிபிஎம் கவுன் சிலர் சாந்தி வெளிநடப்பு செய்தார்.