திருமண்டங்குடி திரு ஆரூரான் சர்க்கரை ஆலை முறைகேடாக விவசாயிகள் பெயரில் பெற்ற ரூ.300 கோடி வங்கி கடனைத் தீர்க்க வேண்டும் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி தமிழ்நாடு கரும்பு விவசாயிகள் சங்கம் சார்பில் கபிஸ்தலம் அருகே ஆலை முன்பு 19 ஆவது நாளாக காத்திருப்பு போராட்டம் நடைபெற்றது. இதில் விவசாயிகள் கரும்பை கையில் ஏந்தி முழக்கமிட்டனர். கரும்பு விவசாயிகள் சங்க மாநிலச் செயலர் காசிநாதன் உள்ளிட்ட பலர் பங்கேற்றனர்.