திருச்சிராப்பள்ளி, ஆக.7 - நூறு நாள் வேலையை முடக்கும் பிடிஓ நிர்வாகத்தை கண்டித்து விவசாயத் தொழி லாளர்கள் காத்திருப்பு போராட்டத்தில் ஈடு பட்டனர். மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை வாய்ப்புத் திட்டத்தை முடக்கும் பி.டி.ஓ நிர்வாகத்தை கண்டித்தும், ஜாப் கார்டு பெற்றுள்ள அனைவருக்கும் வேலை வழங்க வேண்டும். குறைந்த எண்ணிக்கையில் வேலை கொடுக்கும் நடைமுறையை கைவிட வேண்டும். வேலை செய்த தொழிலா ளர்களுக்கு தாமதமின்றி 15 நாட்களில் கூலி வழங்க வேண்டும். ஒன்றிய அரசு அறிவித்த சட்டக்கூலி ரூ.319-ஐ வழங்க வேண்டும். புலிவலம் ஊராட்சி அலுவலகத்தில் ஒப்பந்தம் செய்த வகையில், வேலை வழங்காத பி.டி.ஓ மற்றும் அலுவலர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும். பெரமங்க லம், மூவானுர், புலிவலம் ஊராட்சியில் வேலை கேட்கும் அனைவருக்கும் வேலை வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி இந்தப் போராட்டம் நடைபெற்றது. அகில இந்திய விவசாயத் தொழிலா ளர்கள் சங்கம் சார்பில் செவ்வாய்கிழமை திருச்சி மாவட்டம் பெரமங்கலம் ஊராட்சி அலுவலகம் முன்பு நடைபெற்ற போராட்டத் திற்கு ஒன்றியச் செயலாளர் அசோக் தலைமை வகித்தார். போராட்டத்தை விளக்கி மாநிலக் குழு உறுப்பினர் சந்திரன், மாவட்டச் செயலாளர் சுப்பிரமணியன், மாவட்ட துணைச் செயலாளர் முத்துக்குமார், ஒன்றிய துணைத் தலைவர்கள் வீராச்சாமி, பிரபு ஆகி யோர் பேசினர். பின்னர் நடைபெற்ற அமைதி பேச்சு வார்த்தையில் உடன்படிக்கை ஏற்பட்டதை யடுத்து காத்திருப்பு போராட்டம் தற்காலிக மாக கைவிடப்பட்டது.