நாகப்பட்டினம், ஜூலை 22-
மணிப்பூர் மாநிலத்தில் நடைபெற்று வரும் கலவரத்தைக் கட்டுப்படுத்த வேண்டும். பெண்கள் மீது பாலியல் வன் கொடுமைகளை நிகழ்த்திய கயவர்களுக்கு கடுமையான தண்டனை வழங்க வேண்டும். கலவரத்தை கட்டுப்படுத்தாமல் வேடிக்கை பார்க்கும் அம்மாநில பாஜக முதல்வர் பைரேன் சிங் பதவி விலக வேண் டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியு றுத்தி தமிழ்நாடு முழுவதும் சனிக்கிழமை மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
நாகப்பட்டினம் மாவட்டம் கீழ்வேளூர் வடக்கு ஒன்றியம் சார்பில் கீழ்வேளூர் பேருந்து நிலையத்தில் கண்டன ஆர்ப்பாட் டம் நடைபெற்றது. கீழ்வேளூர் வடக்கு ஒன்றிய செயலாளர் என்.எம். அபுபக்கர் தலைமை வகித்தார். நாகை மாவட்டச் செய லாளர் வி.மாரிமுத்து கண்டன உரையாற்றி னார். மாவட்டக் குழு உறுப்பினர்கள் எஸ்.பாண்டியன், டி.துரைராஜ் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
புதுக்கோட்டை
புதுக்கோட்டை பேருந்து நிலையத்தில் மாதர் சங்கம், வாலிபர் சங்கம், மாணவர் சங்கம், தமிழ்நாடு தீண்டாமை ஒழிப்பு முன் னணி ஆகிய அமைப்புகளின் சார்பில் நடை பெற்ற ஆர்ப்பாட்டத்திற்கு மாதர் சங்க மாவட்டத் தலைவர் எஸ்.பாண்டிச்செல்வி தலைமை வகித்தார்.
சிபிஎம் மாவட்டச் செயலாளர் எஸ்.கவி வர்மன், நகரச் செயலாளர் ஆர். சோலை யப்பன், தீண்டாமை ஒழிப்பு முன்னணி மாவட்டச் செயலாளர் சி.ஜீவானந்தம். தலை வர் டி.சலோமி, மாதர் சங்க மாவட்டச் செய லாளர் பி.சுசிலா, வாலிபர் சங்க நகரச் செய லாளர் கு.ஜெகன், மாணவர் சங்க மாவட்டச் செயலாளர் எஸ்.ஜனார்த்தனன், தலைவர் அ.சந்தோஷ்குமார், தமுஎகச மாவட்டச் செயலாளர் ஸ்டாலின் சரவணன், மாற்றுத் திறனாளிகள் சங்க நகரச் செயலாளர் ரமேஷ், உள்ளிட்டோர் உரையாற்றினர்.
கீரனூர் காந்தி சிலை முன்பு நடை பெற்ற ஆர்ப்பாட்டத்துக்கு, கட்சியின் குன்றாண்டார்கோவில் ஒன்றியச் செயலா ளர் எஸ்.கலைச்செல்வன் தலைமை வகித் தார். சிஐடியு மாவட்டச் செயலாளர் அ.ஸ்ரீதர், விவசாயத் தொழிலாளர் சங்கத்தின் ஒன்றி யச் செயலாளர் பி.பெருமாள், விவசாயி கள் சங்க ஒன்றியச் செயலாளர் கே.பழனி வேல், கீரனூர் பேரூராட்சி உறுப்பினர் மா.மகாலட்சுமி, சிஐடியு ஒருங்கிணைப்பா ளர் செல்வராஜ், வாலிபர் சங்க ஒன்றியத் தலைவர் கா.கார்த்திகேயன், நகரச் செயலர் ஆறுமுகம் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
திருச்சிராப்பள்ளி
வாலிபர் சங்கம், மாதர் சங்கம், மாண வர் சங்கம், விவசாய சங்கம், மாற்றுத்திற னாளிகள் சங்கம் சார்பில் சனிக்கிழமை திருச்சி தலைமை தபால் நிலைய முற்றுகை மற்றும் சாலை மறியல் போராட்டம் நடை பெற்றது.
போராட்டத்திற்கு வாலிபர் சங்க மாவட்டத் தலைவர் லெனின், மாதர் சங்க மாவட்டத் தலைவர் பொன்மகள், தீண்டாமை ஒழிப்பு முன்னணி மாவட்டத் தலைவர் கனல் கண்ணன், மாணவர் சங்க மாவட்டத் தலைவர் சூர்யா, விவசாயத் தொழிலாளர் சங்க தலைவர் தங்கதுரை ஆகியோர் தலைமை வகித்தனர்.
போராட்டத்தில் ஈடுபட்ட தீண்டாமை ஒழிப்பு முன்னணி மாவட்டச் செயலாளர் வெற்றிச்செல்வன், விவசாய சங்க மாவட்டச் செயலாளர் கார்த்திகேயன், மாதர் சங்க மாவட்டச் செயலாளர் சரஸ்வதி, மாவட்ட பொருளாளர் ராகிலா, ரேணுகா, மாணவர் சங்க மாவட்டச் செயலாளர் மோகன், வாலிபர் சங்க மாவட்டச் செயலா ளர் சேதுபதி, மாற்றுத்திறனாளி சங்க மாவட்டச் செயலாளர் குமார் உள்பட 50-க்கும் மேற்பட்டோரை போலீசார் கைது செய்தனர்.
இதேபோன்று இந்திய ஜனநாயக வாலிபர் சங்கத்தின் காட்டூர் பகுதி குழு சார்பில் திருவெறும்பூர் நவல்பட்டு சாலை யில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. ஆர்ப்பாட்டத்திற்கு பகுதி செயலாளர் சந்தோஷ் தலைமை வகித்தார். மாவட்ட தலைவர் பா.லெனின், மாவட்ட துணை செயலாளர் யுவராஜ், பகுதி தலைவர் சாதிக், இளம் பெண்கள் கன்வீனர் நிவேதா மற்றும் நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.
கும்பகோணம்
தஞ்சாவூர் மாவட்டம் கும்பகோணம் காந்தி பூங்கா அருகில் அனைத்திந்திய ஜன நாயக மாதர் சங்கம், வாலிபர் சங்கம், அனைத்து வகை மாற்றுத்திறனாளிகள் சங்கம் மற்றும் சிஐடியு சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
ஆர்ப்பாட்டத்திற்கு மாதர் சங்க நகரத் தலைவர் சுமதி செந்தில்குமார் தலைமை வகித்தார். மாதர் சங்க மாநிலக் குழு உறுப்பினர் கலைச்செல்வி கண்டன உரை யாற்றினார். மாதர் சங்க நகரச் செயலாளர் தனலட்சுமி, சுமதிசெல்வம், ஜோதி, தமிழ ரசி, வாலிபர் சங்க மாவட்டப் பொருளாளர் ராமன், நகரச் செயலாளர் ரஞ்சித் குமார், சிஐடியு தொழிற்சங்க உறுப்பினர் ஆர்.மனோகரன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.
மயிலாடுதுறை
மயிலாடுதுறை கிட்டப்பா அங்காடி முன்பு மார்க்சிஸ்ட் கட்சி சார்பில் நடை பெற்ற ஆர்ப்பாட்டத்திற்கு மாவட்டச் செய லாளர் பி.சீனிவாசன் தலைமை வகித்தார். மாவட்ட செயற்குழு உறுப்பினர்கள் ஜி.ஸ்டா லின், எஸ்.துரைராஜ், டி.சிம்சன், ப.மாரி யப்பன், ஏ.ரவிச்சந்திரன், சி.விஜயகாந்த், ஜி.வெண்ணிலா, கே.பி.மார்க்ஸ், மயிலாடு துறை ஒன்றியச் செயலாளர் டி.ஜி.ரவி, நகரச் செயலாளர் ஏ.ஆர்.விஜய் உள்ளிட் டோர் உரையாற்றினர்.
திருக்கடையூர்
திருக்கடையூரில் இந்திய ஜனநாயக வாலிபர் சார்பில் மாவட்ட தலைவர் ஐயப்பன் தலைமையில் கண்டன ஆர்ப்பாட்டம் நடை பெற்றது. மாவட்டச் செயலாளர் ஏ.அறிவழ கன், ஒன்றியச் செயலாளர்கள் பவுல் சத்ய ராஜ், குமரேசன், குமார் மற்றும் தரங்கம் பாடி ஒன்றிய தலைவர் ஜி.கார்த்திகேசன், செம்பை ஒன்றியத் தலைவர் அனிஷ் ரஹ் மான் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
திருவாரூர்
திருவாரூர் பழைய பேருந்து நிலையம் அருகே இந்திய ஜனநாயக வாலிபர் சங்கம் மற்றும் இந்திய மாணவர் சங்கத்தின் சார்பில் ஒன்றிய அரசை கண்டித்து கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. வாலிபர் சங்க மாவட்டச் செயலாளர் ஏ.கே.வேலவன் தலைமை வகித்தார். மாணவர் சங்க மாவட்டச் செயலாளர் ஆனந்த், வாலிபர் சங்க மாவட்டத் தலைவர் ஜெய்கிஸ் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டார்.