மயிலாடுதுறை, டிச.7 - மயிலாடுதுறை அருகேயுள்ள சோழம் பேட்டை கிராமத்திலுள்ள துணை அங்காடி யில் கடந்த பல மாதங்களாக, மாடுகள்கூட உண்பதற்கு மறுக்கும் நிலையிலுள்ள புழுத் துப் போன அரிசிகளையே தொடர்ந்து விநி யோகிக்கின்றனர். இதனால் ரேசன் அரிசி களை மட்டுமே நம்பியுள்ள ஆயிரக்கணக் கான மக்கள் கடுமையான அதிருப்தியில் உள்ளனர். இதுகுறித்து அதிகாரிகளிடம் நேரில் முறையிட்டும், பலமுறை மனுக்களை அளித்தும் எந்தவித நடவடிக்கையும் எடுக்கா ததை கண்டித்து செவ்வாயன்று சோழம் பேட்டை ரேசன் கடை முன்பு மார்க்சிஸ்ட் கட்சி யின் கிளை செயலாளர்கள் கே.ராமதாஸ், எஸ்.எழிலரசி ஆகியோர் தலைமையில் முற்றுகை போராட்டத்தில் ஈடுபட்டனர். மாவட்ட செயற்குழு உறுப்பினர் ப.மாரி யப்பன், ஒன்றிய செயலாளர் டி.ஜி.ரவி, மாவட்டக்குழு உறுப்பினர்கள் சி.மேகநாதன், ஏ.அறிவழகன், மாற்றுத்திறனாளிகள் சங்க மாவட்ட செயலாளர் டி.கணேசன், விவசாய தொழிலாளர் சங்க ஒன்றிய தலைவர் எம்.மணி, இயற்கை விவசாயி மாப்படுகை ராம லிங்கம் மற்றும் ஒன்றியக்குழு உறுப்பி னர்கள் உரையாற்றினர். புழுத்துப் போன அரிசிக்கு பதிலாக நல்ல அரிசியை வழங்க வேண்டும். என்பி ஹெச்ஹெச் என்ற குறியீட்டுடன் ஸ்மார்ட் கார்டு வழங்கியதில் மோசடி நடந்துள்ளது. அதனால் அரசின் சலுகைகளை பெற முடிய வில்லை. எனவே பிஹெச்ஹெச் அட்டை களாக மாற்றி தர வேண்டும். அனைத்து ரேசன் அட்டைகளுக்கும் மண்ணெண்ணெய் வழங்க வேண்டும் உள்ளிட்ட கோரிக்கை களை வலியுறுத்தி நடந்த முற்றுகை போராட் டத்தில் 200-க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்.