திருச்சிராப்பள்ளி, ஏப்.28- திருச்சி மாவட்டம் மண்ணச்சநல்லூர் வட்டம் எதுமலை கிராமத்தை சேர்ந்த வர் ராமர் விவசாயக்கூலி. இவர் கடந்த சில தினங்களுக்கு முன் இறந்து விட்டார். இவரது மனைவி அமிர்தம் (60) கணவரின் இறப்பு சான்றிதழ் வேண்டி எதுமலை கிராம நிர்வாக அலுவலர் சுரேஷிடம் விண்ணப்பித்துள்ளார். சான்றிதழ் வழங்க கிராம நிர்வாக அலு வலர் ரூ.1000 லஞ்சம் கேட்டுள்ளார். லஞ்சம் கொடுக்க விரும்பாத அமிர்தம் இதுகுறித்து லஞ்ச ஒழிப்புத்துறை போலீசில் புகார் செய்தார். அவர்களின் ஆலோசனைப் படி புதனன்று அமிர்தம் கிராம நிர்வாக அலுவலர் அலுவலகத்தில் சுரேஷிடம் ரூ.1000த்தை கொடுத்தார். அப்போது அங்கு வந்த லஞ்ச ஒழிப்புத்துறை டிஎஸ்பி மணிகண்டன் தலைமையிலான போலீசார் சுரேசை கைது செய்தனர்.