தஞ்சாவூர், ஜூன் 24-
தஞ்சாவூர் மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்ட அரங்கில், மாவட்ட ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறை சார்பில், நீதித்துறை, அரசுத்துறை மற்றும் காவல் துறை அலுவலர்களுடன் விழிக்கண் குழுக் கூட்டம் நடைபெற்றது.
தமிழக அரசின் தலைமை கொறடா முனைவர் கோவி.செழியன், மாவட்ட ஆட்சி யர் தீபக் ஜேக்கப் ஆகியோர் தலைமை வகித்தனர். மாவட்ட காவல் கண்காணிப்பா ளர் ஆஷிஷ் ராவத் முன்னிலை வகித்தார்.
இதுகுறித்து தமிழக அரசின் தலைமை கொறடா முனைவர் கோவி.செழியன் கூறு கையில், “இக்கூட்டத்தில், உண்மைக்குப் புறம்பான வழக்குகள், முந்தைய கூட்டத் தில் உறுதி செய்யப்படாத, புதிதாக ஆய்வுக்கு வைக்கப்படும் வழக்குகள், புலன் விசாரணை வழக்குகள், நீதிமன்ற விசாரணை யில் உள்ள வழக்குகள், நீதிமன்ற விசாரணை முடிவுற்ற வழக்குகள், தீருதவித்தொகை நிலுவை, வட்டாட்சியரிடம் இருந்து சாதிச் சான்றிதழ் நிலுவை பட்டியல் போன்ற பல்வேறு பொருளடக்கம் குறித்து ஆய்வு செய்யப்பட்டது.
மேலும், ஆதிதிராவிடர் நலப் பள்ளி களில் கல்வித்தரம், பயிற்று நிலை வசதிகள் மேம்பாட்டிற்கான அறிவுரைகள் நல்குதல், விடுதிகளில் விளையாட்டு வசதிகள், நூலக மேம்பாடு, தேர்வு ஆயத்த பயிற்சிகள் அளிக்க உறுதுணை நல்குதல், பொங்கல் திருநாள், அம்பேத்கர் பிறந்தநாள் மற்றும் நினைவு நாள், ஆதிதிராவிடர் நலப் பள்ளிகளில் மாவட்ட அளவிலான விளை யாட்டுப் போட்டிகள், கலைப் போட்டிகள், பேச்சு, கட்டுரை போட்டிகள் நடத்துதல்.
அரசு பணியிடங்களில் ஒதுக்கீடு நடை முறையை ஆய்விடல், கல்வி நிறுவனங்க ளில் ஒதுக்கீடு நடைமுறையை ஆய்விடு தல், சிறப்பு உள்ளடக்க திட்டங்கள் மற்றும் மத்திய அரசின் சிறப்பு நிதியின் கீழ் செயல் படுத்தப்பட்டு வரும் திட்டங்களை ஆய்விடு தல், புதிதாக அறிவுரை வழங்குதல், இத்திட் டங்களை பரப்பும் வகை செய்தல், தாட்கோ திட்டங்களை பரப்பும் வகை செய்தல்.
ஆதி திராவிடர்களுக்கு வீட்டு மனை, பயிர் நிலம் வழங்குதலையும், வழங்கியதை பேணுதலையும் ஆய்விடல், நில உச்ச வரம்பு நிலங்கள், பூமிதான நிலங்கள் இவற்றை ஆதிதிராவிடர்களுக்கு அளித்தல், அளிக்கப்பட்ட நிலங்களை பேணுதல், ஆதி திராவிடர் மேம்பாடு குறித்த பொதுவான ஆலோசனை வழங்குதல் உள்ளிட்ட பல்வேறு கருத்துகள் விவாதிக்கப்பட்டன. அவற்றை விரைவாக முடிக்குமாறு அலுவ லர்களுக்கு அறிவுறுத்தப்பட்டது” என்றார்.
கூட்டத்தில் மாவட்ட ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறை அலு வலர் செ.இலக்கியா மற்றும் அரசு அலுவ லர்கள் கலந்து கொண்டனர்.