districts

img

வெங்கடேஸ்வரா மெட்ரிக்.பள்ளி மாணவர்கள் தேசிய அளவிலான நீச்சல் போட்டிக்கு தகுதி

புதுக்கோட்டை,  ஆக.2- புதுக்கோட்டை திருக்கோகர்ணம் ஸ்ரீவெங்கடேஸ்வரா மெட்ரிக்.மேல் நிலைப்பள்ளியில் பயிலும் மாணவர்கள் மாநில அளவிலான நீச்சல் போட்டியில் சாம்பியன் பட்டம் வென்று இந்திய அள விலான நீச்சல்போட்டிகளில் பங்குபெறத் தகுதி பெற்றுள்ளனர். தமிழ்நாடு மாடர்ன் பெந்தலான் அசோ சியேசன் சமீபத்தில் காஞ்சிபுரத்தில் மாநில  அளவிலான நீச்சல் போட்டிகளை நடத்தி யது. இதில்பள்ளியின் ஐந்தாம் வகுப்பு மாணவி எம்.சந்தோஷ்கா பதினோரு வயதுக்கு உட்பட்டோருக்கான பிரிவில் கலந்து கொண்டு பையாத்தல், ட்ரயா த்தல், லேசர் ரன் ஆகிய எல்லாப் போட்டி களிலும் முதலிடமும் பொதுப்போட்டியில் இரண்டாம் இடமும் பெற்றுள்ளார். ஏழாம் வகுப்பு மாணவர் எம். நிஷாந்த் கிருஷ்ணன் பதின்மூன்று வயதுப் பிரிவில் டிரையாத்தல் போட்டியில் முதலி டமும் பையாத்தல் மற்றும் லேசர் ரன்  போட்டிகளில் மூன்றாம் இடமும் பெற்றுள் ளார். ஒன்பதாம் வகுப்பு மாணவன் தனுஷ்  கிருஷ்ணன் பதினைந்து வயதுக்கு உட்பட் டோருக்கான பிரிவில் டெட்ராத்த லான்போட்டியில் மூன்றாம் பரிசு பெற்று உள்ளார். மாநில அளவிலான போட்டிகளில் வெற்றி பெற்றதைத் தொடர்ந்து இந்திய அளவில் ஆகஸ்ட் மாதம் நடைபெற வுள்ள நீச்சல் பொட்டிகளில் கலந்து கொள்ள  உத்தரப்பிரதேசம் மற்றும் உத்தரகண்ட் மாநிலங்களுக்கு செல்கின்றனர். இந்திய அளவிலான போட்டி களுக்குச் செல்லும் மாணவர்களை பள்ளி யின் இயக்குநர் சுதர்சன் பரிசுகள் வழங்கிப் பாராட்டுகளைத் தெரிவித்தார்.