புதுக்கோட்டை, ஜூன் 21-
புதுக்கோட்டை மாவட்டம் வேங்கைவயல் கிராமத்தில் பட்டி யல் வகுப்பு மக்கள் வசிக்கும் பகு தியில் உள்ள மேல்நிலை நீர்த் தேக்கத் தொட்டியில் மனிதக் கழிவு கலக்கப்பட்ட விவகாரம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.
இதுதொடர்பாக நியமிக்கப் பட்டுள்ள ஒரு நபர் விசாரணை ஆணைய நீதிபதி சத்தியநாராய ணன் இரண்டாம் முறையாக புதன்கிழமை அரசு அலுவலர்களு டன் ஆலோசனை நடத்தினார்.
கூட்டத்திற்கு பிறகு செய்தியா ளர்களின் அவர் தெரிவித்ததாவது: சிபிசிஐடி போலீசார் இதுவரை 159 பேரிடம் விசாரணை மேற் கொண்டுள்ளனர். இன்னும் 50 பேரிடம் விசாரிக்க வேண்டும் என தெரிவித்துள்ளனர். ஆடியோ சோதனை மற்றும் மனிதக் கழிவைக் கொண்டு நடத்தப்படும் மரபணு சோதனை முடிவுகள் வழக்கமான வரிசைப்படிதான் மேற்கொள்ள முடியும். எதையும் அவசரப்படுத்த முடியாது.
சிபிசிஐடி விசாரணை நடந்து கொண்டிருப்பதால், சிபிஐ விசா ரணை தேவையா என இப்போது முடிவு செய்ய முடியாது. முத்துக் கிருஷ்ணன் என்பவர் தாக்கல் செய்துள்ள மனு மீதான விசாரணை மதுரை உயர்நீதிமன்றத்தில் விசா ரணைக்கு வர உள்ளது. அதில் நீதி மன்றம் என்ன உத்தரவிடப் போகிறது என்பதையும் பார்க்க வேண்டும்.
டிச.26 அன்று மனிதக் கழிவு கலக்கப்பட்டது தெரியவந்தது. அதற்கு முன் எப்போது கலக்கப் பட்டது எனத் தெரியாது. டிச.22 அன்று கடைசியாக தொட்டியைக் கழுவியதாக கூறுகிறார்கள். எனவே, மேல்நிலை நீர்த்தேக்கத் தொட்டிகளை தொடர்ந்து பரா மரிக்கும் முறை குறித்த அரசின் நடைமுறைகள், விதிகளை அறிக்கையாக கேட்டுள்ளேன்.
இவ்வாறு அவர் தெரிவித்தார்.
மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் நடைபெற்ற கூட்டத் திற்கு மாவட்ட ஆட்சியர் ஐ.சா.மெர்சி ரம்யா முன்னிலை வகித் தார். மாவட்டக் காவல் கண்கா ணிப்பாளர் வந்திதா பாண்டே, மாவட்ட வருவாய் அலுவலர் மா. செல்வி, மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குநர் நா.க விதப்பிரியா உள்ளிட்ட அலுவ லர்கள் பங்கேற்றனர்