districts

img

மாணவர்களுக்கு பாராட்டு விழா

தஞ்சாவூர், மே.2 -  தஞ்சாவூர் அருகே உள்ள வல்லம் பெரியார் மணியம்மை அறிவியல் மற்றும் தொழில்நுட்ப நிறுவனத்தில், பிரிட்டிஷ் கவுன்சில் மூலம் நடை பெற்ற அப்டிஸ் ஜெனரல் என்னும் ஆங்கில புலமைத் தேர்வில் தகுதி பெற்ற மாணவர்களுக்கு பாராட்டு விழா நடைபெற்றது.  பிரிட்டிஷ் கவுன்சில் - அப்டிஸ் ஜெனரல் ஆங்கில புலமை தேர்வில் தகுதி பெற்ற 52 மாணவர்களுக்கு  துணைவேந்தர், பதிவாளர் ஆகியோர் சான்றிதழ்களை வழங்கினர்.  இந்நிகழ்ச்சிக்கு, பல்கலைக்கழக துணைவேந்தர் பேராசிரியர் வி.ராம சந்திரன் தலைமை வகித்தார். அவர் மாணவர்களை வாழ்த்திப் பேசுகை யில், “மாணவர்கள் இதுபோன்ற ஆங்கில புலமைகளை வளர்த்துக் கொள்ள வேண்டும். தங்கள் திறமை களை மென்மேலும் வளர்த்துக் கொண்டு வாழ்க்கையில் சிறப்பான இடத்துக்கு சென்றடைய வேண்டும்” என்றார்.  நிகழ்வில், பல்கலைக்கழகத்தின் பதிவாளர், வணிக மேலாண்மைத் துறைத் தலைவர், துறை ஆசிரியர்கள், மாணவர்கள் கலந்து கொண்டனர்.