districts

திருச்சி மகளிர் தனிச்சிறையில் காலியிடம்: விண்ணப்பங்கள் வரவேற்பு

திருச்சிராப்பள்ளி, அக்.25 - திருச்சி மகளிர் தனிச் சிறையில் மதிப்பூதியத்தின் அடிப்படையில் நிரப்பிடு வதற்கு பணியிடம் ஒன்று காலியாக உள்ளது. இப் பணியிடத்திற்கு கீழ்க்கண்ட தகுதிகளைப் பெற்றிருக்க வேண்டும்.  கல்வித்தகுதி: சமூகப் பணி, சமூகசேவை, சமூக  அறிவியல், குற்றவியல், சமூகவியல், முதியோர் கல்வி (வயது வந்தோர் கல்வி) ஆகிய ஏதேனும் ஒன்றில் முதுகலைப் பட்டம்,  சமூகப்பணி, சமூகசேவை, சமூக அறிவியல், குற்ற வியல், சமூகவியல் ஆகிய வற்றில்  இளங்கலைப் பட்டம், சமூகப்பணி, சமூக சேவை, சமூக அறிவியல்,  குற்றவியல், சமூக வியல் ஆகியவற்றில் டிப்ள மோவுடன் வேறு ஏதேனும் பட்டம் பெற்றிருக்க வேண்டும். இடஒதுக்கீடு : பொது சுழற்சி - வயதுவரம்பு: 1.7.2022 அன்று குறைந்த பட்சம் 23 வயது பூர்த்திய டைந்திருக்க வேண்டும். எஸ்.சி, எஸ்.சி(எ), எஸ்.டி, எம்.பி.சி, டி.சி.எஸ், பி.சி, (எஸ்), பி.சி(எம்) மற்றும் டி. டபிள்யு (ஆதரவற்ற விதவை) ஆகியவற்றுக்கு வயது வரம்பு இல்லை. இதர  பிரிவினருக்கு - 40 வயது. ஊதிய விகிதம் ரூ. 15,000. தகுதியுள்ள மேற் குறிப்பிட்ட வகுப்பினர் மட்டும் கீழ்க்கண்ட முகவரிக்கு கீழ்க்காணும் ஆவணங்களின் நகல்களு டன் 10.11.2022 ஆம் தேதிக் குள் விண்ணப்பிக்குமாறு கேட்டுக் கொள்ளப்படு கிறது. விண்ணப்பத்துடன் அனுப்ப வேண்டிய ஆவண நகல்கள்: சாதிச் சான்றிதழ், குடும்ப அட்டை, ஆதார் அட்டை, பாஸ்போர்ட் சைஸ் போட்டோ ஒன்று, கல்விசான்றுகள். விண்ணப்பங்களை, சிறை கண்காணிப்பாளர், மகளிர் தனிச்சிறை, காந்தி  மார்க்கெட் காவல் நிலையம்  அருகில், திருச்சி - 620 008  என்ற முகவரியில் அனுப்ப லாம் என திருச்சி மாவட்ட ஆட்சியர் பிரதீப் குமார் தெரி வித்துள்ளார்.