districts

img

குடிமனை வழங்கக் கோரி வி.தொச. தெருமுனைக் கூட்டம்

தஞ்சாவூர், ஆக.11-  அகில இந்திய விவசாயத் தொழிலாளர்கள் சங்கத்தின் சார்பில், குடிமனை இல்லாத அனைவருக்கும் குடிமனை, நிலமில்லாத விவசாயத் தொழிலாளர்களுக்கு நிலம் கேட்டு, தஞ்சை மாவட்டம் திருவையாறு தேரடித் திடலில் தெருமுனைக் கூட்டம் நடைபெற்றது. சங்க மாவட்டத் தலைவர் ஆர்.பிரதீப் ராஜ் குமார் தலைமை வகித்தார். அடிமனை பயன்படுத்துவோர் மற்றும் குத்தகை விவசாயிகள் பாதுகாப்பு சங்க மாவட்டச் செயலாளர் எம்.ராம் கோரிக்கை விளக்கவுரை ஆற்றினார். மூத்த தோழரும் சங்கத்தின் ஒன்றியக்குழு உறுப்பினருமான பி.செந்தாமரைச் செல்வி, ஒன்றியப் பொருளாளர் பி.கலியமூர்த்தி, ஒன்றியக்குழு உறுப்பினர் புண்ணியமூர்த்தி, பெண் விவசாயத் தொழிலாளர்கள் சங்க மாவட்ட நிர்வாகி பி.சுமிதா உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.