தஞ்சாவூர், நவ.16 - மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் தஞ்சாவூர் மாவட்டம் பேராவூரணி ஒன்றிய 14 ஆவது மாநாடு, உதயம் விழா அரங்கில் சனிக்கிழமை நடைபெற்றது. ஒன்றியக் குழு உறுப்பி னர்கள் ஏ.வி.குமாரசாமி, ஜாக்குலின் மேரி ஆகியோர் தலைமை வகித்தனர். ஆர்.மாணிக்கம் மாநாட்டுக் கொடியேற்றினார். எஸ். ஜகுபர் அலி வரவேற்றார். மாவட்டச் செயற்குழு உறுப்பினர் என்.வி. கண்ணன் தொடக்கவுரை யாற்றினார். மாவட்டச் செயற்குழு உறுப்பினர் கோ. நீலமேகம் நிறைவுரை யாற்றினார். மாநாட்டில், ஒன்றியச் செயலாளராக வே.ரெங்க சாமி தேர்வு செய்யப்பட்டார். 11 பேர் கொண்ட ஒன்றியக் குழு தேர்வு செய்யப்பட்டது. பேராவூரணி அண்ணா நகர் பகுதியில், தனி நபரி டமிருந்து இடத்தை விலைக்கு வாங்கி நீண்ட காலமாக குடியிருந்து வரும் நபர்களுக்கு பாதையை எழுதித் தராததால், பேரூ ராட்சி நிர்வாகம் சாலை அமைக்க முடியாத நிலை உள்ளது. இருதரப்பையும் அழைத்துப் பேசி அந்த பிரச்சனையை தீர்க்க மாவட்ட நிர்வாகம் நடவ டிக்கை எடுக்க வேண்டும். பேராவூரணி வழியாக காரைக்குடியில் இருந்து சென்னைக்கு தினசரி ரயில் இயக்க வேண்டும். அரசு மருத்துவமனை புதிய கட்டடப் பணிகளை விரைந்து தொடங்க வேண் டும். பாம்புக்கடி, வெறி நாய்கடி உள்ளிட்ட விஷ முறிவு மருந்துகள், சர்க்கரை, ரத்தக்கொதிப்பு மாத்திரைகள் உள்ளிட்ட மருந்துப் பொருட்கள் தட்டுப் பாடின்றி கிடைக்க நடவ டிக்கை எடுக்க வேண்டும் உள்ளிட்ட பல்வேறு தீர்மா னங்கள் நிறைவேற்றப் பட்டன.