districts

img

கொள்ளிடம் அருகே வடரங்கம் ஊராட்சிக்கு புதிய கட்டிடம் கட்ட வலியுறுத்தல்

சீர்காழி, ஜன.17- வடரங்கம் கிராமத்தில் புதிய ஊராட்சி கட்டிடம் கட்ட வலியுறுத்தப்பட்டுள்ளது. மயிலாடுதுறை மாவட்டம் கொள்ளிடம் அருகே வட ரங்கம் கிராமத்தில் கடந்த  1996 ஆம் ஆண்டு ஊராட்சி  மன்ற அலுவலக கட்டிடம்  கட்டப்பட்டது. தற்போது அந்த கட்டிடம் பழுத டைந்துள்ளது. கட்டிடத்தின் சுவர்களில் விரிசல் ஏற்பட்டு,  மேற்கூரையின் உள்பகுதி யில் உள்ள சிமெண்ட் காரை அப்படியே பெயர்ந்து கீழே விழுந்துள்ளது. மேலும் மேற்கூரையின் சிமெண்ட் காரைகள் எந்நேர மும் இடிந்து விழும் நிலையில் உள்ளது. இங்கு வேறு இடம் இல்லாததால் இந்த பழைய கட்டிடத்திலேயே ஊராட்சி மன்ற நிர்வாகம் இயங்கி வருகிறது. ஊராட் சிக்கு சொந்தமான அனை த்து வகையான அத்தியா வசிய பொருட்கள், பதிவேடு கள் உள்ளிட்ட அனைத்துப் பொருட்களும் இந்த கட்டி டத்திற்குள்தான் வைக்கப்பட் டுள்ளன.  மழை பெய்யும் போதெல் லாம் இந்த கட்டிடத்திற்குள் மழை நீர் கசிந்து உள்ளே இருக்கிற பொருட்கள் நனைந்து விடுகின்றன. ஊராட்சிக்கு சொந்தமான கணக்குகள் அடங்கியுள்ள பதிவேடுகளும் வீணாகும் நிலை உள்ளது. தற்போது மிகவும் ஆபத்தான நிலை யில் இருக்கும் இந்த கட்டிடத் திற்குள்தான் ஊராட்சி மன்ற தலைவர், துணைத் தலை வர், உறுப்பினர்கள் மற்றும் பொதுமக்கள் இருந்து ஊரா ட்சி நிர்வாகத்தை நடத்தி வரு கின்றனர். எனவே இந்த ஊராட்சி  கட்டிடத்தின் ஆபத்தான நிலையை கருத்தில் கொண்டு பழைய கட்டிடத்தை இடித்து  அகற்றி விட்டு, உடனடியாக புதிய ஊராட்சி மன்ற அலுவ லக கட்டிடம் கட்டித் தர வேண்டும் என்று வடரங்கம் கிராம பொதுமக்கள் மாவட்ட  ஆட்சியருக்கு கோரிக்கை மனு அனுப்பியுள்ளனர்.