நாகர்கோவில், ஜன. 2- கன்னியாகுமரி மாவட்டம் பள்ளம்துறையைச் சேர்ந்த மார் க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி நிர் வாகி மிக்கேல் நாயகியின் குடும் பத்தினர் மீது கொலை வெறித் தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது. குற்றவாளிகளை கைது செய்து நடவடிக்கை எடுக்குமாறு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி வலியுறுத்தியுள்ளது. இராஜாக்கமங்கலம் ஒன்றி யம், பள்ளம் துறையைச் சேர்ந்த வர் மிக்கேல்நாயகி. இவர் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி யின் வட்டாரக் குழு உறுப்பின ராக செயல்பட்டு வருகிறார். இவ ரது மகன் லியோ பிக்அப் சரக்கு வாகனம் வைத்து ஒட்டி வரு கிறார். இந்நிலையில், சனிக்கிழமை யன்று (ஜன.1) இவரது வாக னத்தை நண்பர் ஒருவர் எடுக்க முயன்றபோது இன்பெண்டா என்பவர் நடத்தி வரும் கடையின் படிக்கட்டில் உரசியுள்ளது. இதை முன்வைத்து சம்பந்தமே இல்லா மல் அதே பகுதியைச் சேர்ந்த தூர்க்கீஸ், அவரது நண்பர்கள் ஜெரோன், பால் ஆண்டனி, ஜாக்சன், ராஜா ஆகியோர் லியோ விடம் தகராறு செய்து கம்பியா லும் கட்டையாலும் தாக்கி படு காயப்படுத்தினர். அப்போது அவ்வழியாக இருசக்கர வாகனத் தில் வந்த மிக்கேல் நாயகியின் கணவர் அமல்ராஜையும் கடுமை யாக தாக்கியுள்ளனர். இதில் லியோவின் கால் எலும் பில் முறிவு ஏற்பட்டுள்ளது. மேலும் கம்பியால் குத்தப்பட்டு உடல் முழுவதும் காயங்களுடன் ஆசாரிப்பள்ளம் அரசு மருத்து வக்கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். அமல் ராஜூம் காயங்களுடன் சிகிச்சைக் காக அனுமதிக்கப்பட்டுள்ளார். பாதுகாப்பு வழங்குக! மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாவட்ட செயற்குழு உறுப்பினர் என்.எஸ்.கண்ணன், வட்டார செயலாளர் எஸ்.ற்றி. ராஜ்குமார் உள்ளிட்ட நிர்வாகி கள் மருத்துவனை சென்று அவர் களுக்கு ஆறுதல் கூறினர். குற்ற வாளிகளை உடனே கைது செய்ய வலியுறுத்தி சுசீந்திரம் காவல் நிலையத்தில் புகார் அளிக்கப் பட்டுள்ளது. கடந்த 2019 டிசம்பர் மாதம் நடைபெற்ற உள்ளாட்சி மன்ற தேர்தலில் பள்ளம் துறை பஞ்சாயத்து தலைவர் பதவிக்கு மிக்கேல் நாயகி போட்டியிட்டார். அப்போது ஏற்பட்ட அரசியல் பகையே இந்த தாக்குதலுக்கு காரணமாக புகாரில் தெரிவிக் கப்பட்டுள்ளது. மிக்கேல் நாயகிக்கும் அவரது குடும்பத்தினருக்கும் தக்க பாது காப்பு வழங்க வேண்டும் என்றும் குற்றவாளிகளை விரைந்து பிடித்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் சிபிஎம் இரா ஜாக்கமங்கலம் வட்டார குழு செயலாளர் ராஜ்குமார் வலியுறுத் தியுள்ளார்.