districts

img

நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் சிபிஎம் வேட்பாளர்களுக்கு பெ.சண்முகம் வாழ்த்து

மயிலாடுதுறை, பிப்.5 - மயிலாடுதுறை மாவட்டத் தில் நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் போட்டியிடும் மார்க்சிஸ்ட் கட்சியின் வேட் பாளர்களுக்கு மாநில செயற் குழு உறுப்பினர் பெ.சண்முகம் சால்வை அணிவித்து வாழ்த்து  தெரிவித்தார். மயிலாடுதுறை நகராட்சி  29-வது வார்டில் போட்டியி டும் கட்சியின் மூத்த தலை வர்களில் ஒருவரான த.ராயர்,  குத்தாலம் பேரூராட்சியில் போட்டியிடும் 2 ஆவது வார்டு  வேட்பாளர் எஸ்.சிவலிங்கம், 4 ஆவது வார்டு வேட்பாளர் திருநர் ஆர்.சினேகா, 14 ஆவது வார்டு வேட்பாளர் பி.சுந்தர், சீர்காழி நகராட்சி 6 ஆவது வார்டு வேட்பாளர் பி.நூர்ஜகான், 20 ஆவது வார்டு வேட்பாளர் எஸ். இளங்கோவன், வைத்தீஸ்வ ரன் கோவில் பேரூராட்சி 2 ஆவது வார்டு வேட்பாளர் மா.கரிகாலன், 4 ஆவது வார்டு வேட்பாளர் க.லதா, 7  ஆவது வார்டு வேட்பாளர் மா. சரிதா ஆகிய 9 பேருக்கும் மார்க்சிஸ்ட் கட்சியின் மாநில செயற்குழு உறுப்பினர் பெ. சண்முகம் மயிலாடுதுறை மாவட்டக் குழு அலுவலகத் தில் நடந்த நிகழ்ச்சியில் வாழ்த்து தெரிவித்து சால்வை அணிவித்தார். மாவட்டச் செயலாளர் பி. சீனிவாசன் மற்றும் மாவட்ட செயற்குழு, மாவட்டக் குழு உறுப்பினர்கள் கலந்து கொண்டனர்.

;