செங்கல்பட்டு நகராட்சி 29ஆவது வார்டில் மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணி சார்பில் போட்டியிடும் சிபிஎம் வேட்பாளர் என். அன்பு கூட்டணி கட்சியினரிடன் வரதராஜர் நகரில் வீடுவீடாக சென்று வாக்கு சேகரித்தார். இதில் கட்சியின் மாவட்ட செயலாளர் ப.சு.பாரதிஅண்ணா, மாநிலக் குழு உறுப்பினர் இ.சங்கர், மாவட்ட செயற்குழு உறுப்பினர் வி.அரிகிருஷ்ணன், பகுதி செயலாளர் கே.வேலன், திமுக திருப்போரூர் தெற்கு ஒன்றிய செயலாளர் பையனூர் சேகர், நகர செயலாளர் நரேந்திரன், குன்னப்பட்டு ஊராட்சி மன்ற தலைவர் மோகனன் உள்ளிட்ட கூட்டணி கட்சி நிர்வாகிகள் உடனிருந்தனர்.
மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணி சார்பில் சென்னை மாநகராட்சி 41ஆவது வட்டத்தில் போட்டியிடும். மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் வேட்பாளர் பி.விமலா கூட்டணிகட்சியினருடன் கார்னேசன் நகரில் வீடு வீடாக சென்று ஆதரவு கோரினார். மாவட்ட செயற்குழு உறுப்பினர்கள் ஆர்.லோகநாதன், கே.எஸ். கார்த்திஷ், மாவட்டக் குழு உறுப்பினர்கள் வி.குப்புசாமி, எஸ்.பவானி, திமுக பகுதி செயலாளர் ஜெபதாஸ்பாண்டியன், வட்டச்செயலாளர் தேவா உள்ளிட்ட பலர் இதில் கலந்து கொண்டனர்.
பொன்னேரி நகராட்சி 2 ஆவது வார்டில் திமுக தலைமையிலான மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணியின் சார்பில் போட்டியிடும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் வேட்பாளர் எஸ்.குணசேகரன் கூட்டணி கட்சியினருடன் சென்று ஆதரவு திரட்டினார். சிஐடியு மாவட்ட நிர்வாகிகள் சந்திரசேகரன், ஜெயவேல், கோபி, பரமசிவன் உட்பட பலர் இதில் கலந்து கொண்டனர்.
கும்மிடிப்பூண்டி பேரூராட்சி 4ஆவது வார்டில் போட்டியிடும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் வேட்பாளர் வி.குப்பன் கூட்டணி கட்சியினருடன் சென்று மக்களை சந்தித்து ஆதரவு திரட்டினார். இதில் கட்சியின் வட்டச் செயலாளர் இ.ராஜேந்திரன், ஆனந்தன் உட்பட பலர் கலந்து கொண்டனர்.
மதுராந்தகம் நகராட்சியில் 12ஆவது வார்டு மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணியின் சார்பில் போட்டியிடும் சிபிஎம் வேட்பாளர் பி.மாசிலாமணிக்கு ஆதரவு தெரிவித்து கட்சியின் மத்தியகுழு உறுப்பினர் அ.சவுந்தரராசன் வீடு வீடாக சென்று ஆதரவு திரட்டினார். கட்சியின் மாவட்டச் செயலாளர் ப.சு.பாரதி அண்ணா, மாநிலக்குழு உறுப்பினர் இ.சங்கர், வட்டச் செயலாளர் எஸ்.ராஜா உள்ளிட்ட பலர் உடனிருந்தனர்.
மீஞ்சூர் பேரூராட்சியில் 18 ஆவது வார்டில் திமுக தலைமையிலான மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணியின் சார்பில் போட்டியிடும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் வேட்பாளர் என்.ரமேஷ்குமாரை ஆதரித்து புங்கமேடு பகுதியில் திமுக தெற்கு ஒன்றிய செயலாளர் ரமேஷ் ராஜ் செவ்வாயன்று (பிப் 15) தேர்தல் அலுவலகத்தை திறந்து வைத்து ஆதரவு கோரி பிரச்சாரம் செய்தார். உடன் கட்சியின் மாவட்ட செயலாளர் எஸ்.கோபால், மாநில குழு உறுப்பினர் வி.குமார், ஒன்றிய செயலாளர் இ.ஜெயவேல் உட்பட பலர் பங்கேற்றனர்.
காஞ்சிபுரம் மாநகராட்சியில் 1ஆவது வார்டில் போட்டியிடும் சிபிஎம் வேட்பாளர் மு.ராபியா பானு, ஒலி முகமது பேட்டை பகுதியில் வாக்காளர்களை சந்தித்து ஆதரவு திரட்டினார். 12ஆவது வார்டில் போட்டியிடும் மு.சூரிய பாரதி மேட்டு தெரு பகுதியில் செவ்வாயன்று தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார். இதில் கட்சியின் மாநிலக்குழு உறுப்பினர் எஸ்.கண்ணன், மாவட்டச் செயலாளர் சி.சங்கர், மாவட்ட செயற்குழு உறுப்பினர்கள் கே.நேரு, ஆர்.சௌந்தரி மாவட்டக்குழு உறுப்பினர் ஜி.வசந்தா, புவனேஸ்வரி உட்பட பலர் பங்கேற்றனர்.
மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணி சார்பில் தாம்பரம் மாநகராட்சி 28ஆவது வார்டில் போட்டியிடும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி வேட்பாளர் ஜி.விஜயலட்சுமியை ஆதரித்து செவ்வாயன்று (பிப்.15) கக்லான்சாவடி உள்ளிட்ட பகுதிகளில் பல்லாவரம் சட்டமன்ற உறுப்பினர் இ.கருணாநிதி ஆதரவு திரட்டினார்.