தமிழ்நாடு விவசாயிகள் சங்கம் பூதலூர் தெற்கு ஒன்றியச் செயலாளர் கே.தமிழரசனின் அண்ணன், கே.முருகேசன் மகள் எம்.தமிழ்ச்செல்வி - எஸ்.நல்லேந்திரன் திருமண விழா பூதலூர் அருகே செங்கிப்பட்டியில் கடந்த வியாழக்கிழமை நடைபெற்றது. சிபிஎம் மத்தியக் குழு உறுப்பினர் உ.வாசுகி தலைமை வகித்து திருமணத்தை நடத்தி வைத்தார். மாவட்டச் செயற்குழு உறுப்பினர்கள் கோ.நீலமேகம், என்.வி. கண்ணன், பி.செந்தில்குமார், எஸ்.தமிழ்ச்செல்வி, என்.சுரேஷ்குமார், மாவட்டக் குழு உறுப்பினர் கே.காந்தி, பூதலூர் தெற்கு ஒன்றியச் செயலாளர் சி.பாஸ்கர் உள்ளிட்டோர் மணமக்களை வாழ்த்தினர்.